டாலஸ்: கந்தசஷ்டி
நவம்பர் 12, 2015 அன்று கந்தசஷ்டி விழா, டாலஸ் DFW இந்துக் கோவிலில் இனிதே தொடங்கியது. பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வேண்டினர். ஆறு நாட்களும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் நடைபெற்றன. நவம்பர் 21ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இறுதிநாள் நிகழ்வில் பக்தர்கள் முருகப்பெருமானை சப்பரத்தில் வைத்துக் கோவிலைச் சுற்றி வலம்வந்தபின் சூரசம்ஹாரம் நடைபெற்றது. குழந்தைகள் முருகனாகவும், வள்ளி-தெய்வானை ஆகவும் வேடமணிந்து அனைவரையும் மகிழ்வித்தனர். பின் முருகப்பெருமான் திருக்கல்யாணம் இனிதே நடைபெற்றது. சிறப்பாக, ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் விருந்து படைத்து மகிழ்வித்தனர்.

சசிகலா சுப்ரமணியம்,
ஃப்ரிஸ்கோ, டெக்சஸ்

© TamilOnline.com