மேரியட்டா: தீபாவளிக் கொண்டாட்டம்
நவம்பர் 13, 2015 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் கீழ் இயங்கிவரும் மேரியட்டா தமிழ்ப்பள்ளியில் தீபாவளித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளை தீபா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீதேவி கண்ணன் இருவரும் அழகாகத் தொகுத்து வழங்கினார்கள். குழந்தைகள் வண்ணமயமான உடையணிந்து வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வித்தனர்.

இறுதியில் தமிழ்ப்பள்ளி அணியினர், அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வரலாற்றை விளக்கினார்கள். பள்ளி முதல்வர் திரு.முரளிதரன் சுந்தரேசன், துணை முதல்வர்கள் திரு. கண்ணன் ராஜப்பா மற்றும் திருமதி. நிர்மலா அய்யாலு சிறப்பாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

உமா பாபா,
மேரியட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com