ஆற்றுதல்
எழுதிக்கொண்டிருக்கும்
கதையின் காட்டில் பெருந்தீ!
தாக்கம் தாளாத நான்
அதை மகளிடம் சொல்கிறேன்!

முகம் இறுகுகிறது. பின்,
யாருக்கும் எதுவும் ஆகாதுப்பா!
ஓடிப்போய் அந்த பொம்மையை
பெட்டிக்குள் வைத்து மூடுகிறாள்!

பழமைபேசி,
சார்லட், வட கரோலைனா

© TamilOnline.com