யார் நிர்க்கதி?
கரோலைனா சார்லட் விமானநிலையத்தில்
அழுதுகொண்டிருந்த அந்த
சேலையுடுத்திய அறியாப்பெண்ணிடம்
போய் நின்ற உடனேயே
என்கையை எட்டித் தன்கைக்குள் வைத்தனள்.
மூதாட்டியும் என்னுடன் பேசவில்லை,
நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

கூடவே அரைமணி நேரமிருந்தேன்.
விமானம் புறப்படும் நேரம் வந்ததும்
எல்லாரும் எழுந்து கிளம்பிப் போனார்கள்.
அந்த அம்மாவும்தான்.

நிசப்தம்! நிசப்தம்! அவ்வளவு நிசப்தம்!
அடச்சே! விட்டுட்டுப் போய்ட்டாங்களே?

பழமைபேசி,
சார்லட், வட கரோலைனா

© TamilOnline.com