ஒரு நொடியில்...


பார்வதிபுரம் என்ற ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஒரு பேய். ஐநூறு ஆண்டுகளாக அந்த ஊருக்குள் யார் வந்தாலும் அவர்களை பலி கொண்டுவிடுகிறது. அந்தக் கிராமத்துக்குள் நுழைவதற்காக, குழந்தைகளைப் பலிகொடுத்து தனக்கு மாபெரும் சக்தி வரவேண்டும் என்று முயற்சிக்கிறான் மந்திரவாதி ஒருவன். அவனது எண்ணத்தை முறியடித்து குழந்தைகளையும், ஊரையும், மக்களையும் காப்பாற்றுகிறான் நாயகன். இதுதான் 'ஒரு நொடியில்' திரைப்படத்தின் கதை. புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் ஆனந்தராஜ், சிசர் மனோகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய்பர்வேஷ் இசையமைக்கும் இப்படத்தை எம்.ஏ.சௌத்ரி இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com