ஃபிலடெல்ஃபியா: TNF ஈகைவிழா
அக்டோபர் 3 அன்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்ஃபியா கிளை ஈகை விழாவை நடத்தவுள்ளது. இது சீர்காழியில் புறக்கணிக்கப்பட்ட, மனவளர்ச்சி குன்றிய மற்றும் சிறப்புக்குழந்தைகள் வாழும் 'அன்பாலயம்' அமைப்பின் பத்தாண்டுத் திட்டத்தை நிறைவேற்ற நிதி திரட்டும்பொருட்டு ஏற்பாடு செய்யப்படுகிறது. விழாவின் சிறப்பு அம்சங்களாக ஒய்.ஜி. மகேந்திராவின் 'பரீட்சைக்கு நேரமாச்சு' நாடகமும், தமிழகத்தில் TNF பள்ளிகளிலும், திட்டங்களிலும் சேவைசெய்த அமெரிக்கத் தமிழ் இளைஞர்களின் கலந்துரையாடலும் அமையும். ஃபிலடெல்ஃபியா பகுதி தமிழ்மக்கள் 2006ல் ஒய்.ஜி. மகேந்திராவின் நாடகத்தின் மூலம் நிதி திரட்டி, பாழடைந்த கட்டிடத்தில் வாழ்ந்த அன்பாலயம் குழந்தைகளுக்கென இடமொன்றை வாங்கிப் புதிய இல்லம் கட்டினர். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒய்.ஜி. மகேந்திரா நாடகம் மூலம் இக்குழந்தைகளின் உணவு மற்றும் பிற தேவைகளுக்கு வைப்புநிதியை உருவாக்கவென இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

முழு விவரங்களுக்கு
மின்னஞ்சல்: TNF.PHILLY@GMAIL.COM
இணையதளம்: tnfusa.org/philadelphia
தொலைபேசி: 610-444-2628

சோமலெ சோமசுந்தரம்,
ஃபிலடெல்பியா, பென்சில்வேனியா

© TamilOnline.com