தற்காப்பு


இயக்குநர் பி. வாசுவின் மகன் சக்திவேல் வாசு நாயகனாக நடிக்கும் படம் இது. மற்றொரு நாயகனாக சமுத்திரகனி நடிக்கிறார். F.S. பைசல் இசையமைக்க, R.P. ரவி இயக்குகிறார். “மனித உயிரின் மேன்மையைச் சொல்லும் கதை இது. தவறுதலாக நடக்கும் ஒரு கொலையால் ஏற்படும் பிரச்சனைகளை எதார்த்தமான திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மைச் சம்பவங்களின் ஆதாரத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னைக் காத்துக் கொள்வதோடு தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தையும் எப்படிப் பாதுகாப்பது என்பதை 'தற்காப்பு' கொஞ்சம் அழுத்தமாகவே பேசும். காரணம் எதுவானாலும் உயிர்ப்பலி தீர்வாகாது என்ற உயரிய நோக்கத்தை வலியுறுத்துகிறது இப்படம்” என்கிறார். ஆக்‌ஷன் கலந்த அதிரடிப் படம் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com