CCC வழங்கும் 'பாரத தரிசனம்'
ஆகஸ்ட் 15, 2015 அன்று இந்திய சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் விதமாக Carnatic Chamber Concerts (CCC), "பாரத தரிசனம்" என்ற நிகழ்ச்சியை, மில்பிடாஸ் ஷீர்டி சாயிபாபா கோவில் அரங்கத்தில் வழங்கவுள்ளது. இந்தியாவின் கான்சல் ஜெனரல் திரு. அஷோக் வெங்கடேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார். நிகழ்ச்சி மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெறும்.

இது இந்தியாவின் சங்கீத கலாசாரத்தை பிரதிபலிக்கும் சிறப்பு நிகழ்ச்சியாகும். விரிகுடாப்பகுதியில் வசிக்கும் சிறப்புவாய்ந்த 15 சங்கீத வித்வான்களும் குருமார்களும் இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பர். திருமதி. பத்மா மோகன் தொடங்கிய இவ்வமைப்பு ஆறு வருடங்களாக விரிகுடாப்பகுதியில் கர்நாடக இசை கற்கும் இளையோருக்கு மேடையனுபவம் ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடு மாதந்தோறும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது. அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு வலையகம்: www.CarnaticChamberConcerts.com

கிருஷ்ணசாமி நரசிம்மன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com