ராகி புளிக்கூழ்
தேவையான பொருட்கள்
ராகிமாவு - 1 1/2 கிண்ணம்
புளி - 1 எலுமிச்சை அளவு
பச்சைமிளகாய் - 2
மோர்மிளகாய் - 6
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
நல்லெண்ணெய் - 1/2 கிண்ணம்

செய்முறை
புளியைக் கரைத்து ராகிமாவில் ஊற்றி நீர்க்கக் கரைத்து உப்புப் போடவும். தோசைமாவு பதத்தில் வைத்துக்கொண்டு, வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், மோர்மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை எல்லாம் தாளித்து, கரைத்து வைத்துள்ளதை ஊற்றிக் கிளறவும். நன்றாக வெந்து சுருண்டு வரும்போது தட்டில் நல்லெண்ணெய் தடவி அதில் கொட்டிச் சமப்படுத்தி வில்லைகளாகப் போடவும். இது மிகவும் சுவையான புளிக்கூழ். புளித்த மோரிலும் செய்யலாம். சர்க்கரை நோயுள்ளவர்களும் சாப்பிடலாம். அரிசிமாவு, சோளமாவு இவற்றிலும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி,
ப்ரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி

© TamilOnline.com