அரோரா: வறியோர்க்கு உணவு
மே 17 அன்று நண்பகல் 12:00 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புக்கள், தமிழீழத்தில் கொல்லப்பட்ட தமிழர் நினைவுநாளாக 2015 ஆண்டின் மூன்றாவது 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை நடத்தின. ஹெசட் இல்லத்தில் (659 S. River Road, Aurora, IL: 60506; www.hesedhouse.org) இதனை நடத்தினர்.

அக்சயா, சாமா, சுபாசு, ஏரகன், இரித்திக்கு, பிரிண்டெட், சாய்சுவரனேசு ஆகியோர் தம் பெற்றோர் கார்த்திகா, கந்தா, கணேசன், சாக்கிரடீசு, பத்மநாபன், இராமகிருட்டிணன் ஆகியோருடன் இதில் பங்கேற்றனர். திருக்குறளின் 4 அதிகாரங்களின் விளக்கமும், தமிழர் நினைவுநாள் விளக்கமும் கூறியதுடன் வெளிநாட்டறிஞர் சிறப்புரைகள் அடங்கிய சிறு தொகுப்பு நூல் அளிக்கப்பட்டது. ஹெசட் நிறுவனத்திற்கும், அன்றைய உதவியாளருக்கும் நன்றி கூறி விடைபெற்றோம்.

வ.ச. பாபு,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com