ஜூன் 2015: வாசகர் கடிதம்
மே இதழில் ஈர நெஞ்சம் மகேந்திரன் நேர்காணல் மனதை நெகிழவைத்தது. குடும்பச்சூழல் காரணத்தால் உந்தப்பட்டு மற்றவர்களுக்கு உதவ முன்வந்த மகேந்திரனின் தொண்டு மிகச்சிறந்தது. கஷ்டப்படுபவர்களைக் கரைசேர்ப்பதில் இன்பம்காணும் ஈரநெஞ்சம் படைத்த இந்த மனிதரை மனதார வாழ்த்துகிறேன். நிதியுதவி கிடைக்காதபோதிலும் தான் எடுத்த பணியை விடாமல் செய்துவருவது ஒரு மகத்தான செயல். சமுகத்தில் நல்ல பணிகளைச் செய்துவருபவர்களை நேர்காணல் பகுதியில் மிக அருமையாக அறிமுகம் செய்யும் உங்கள் குழுவினரை மனதார வாழ்த்துகிறேன்.

கே. ராகவன்,
பெங்களுரு, இந்தியா

© TamilOnline.com