அட்லாண்டாவில் முத்தமிழ் விழா
ஆகஸ்ட் 28, 2005 அன்று அட்லாண்டா பெருநகர்த் தமிழ்ச் சங்கம் (www.gatamilsangam.org) நோர்கிராஸ் மெடோ கிரீக் பள்ளியரங்கில் முத்தமிழ் விழா கொண்டாடியது. இசைத் தமிழை வழங்கிய பி. சுசீலா மற்றும் ஜமுனா ராணி தனித்தும் இணைந்தும் பல இனிய பழம் பாடல்களை வழங்கிப் பரவசப் படுத்தினர். இயல் தமிழின் வெளிப்பாடாக உமையாள் முத்து அவர்களின் சுவையான சொற்பொழிவு அமைந்தது. பாரதிதாசனின் படைப்புகள் குறித்து சூரி குழுவினர் வழங்கிய நகைச்சுவை நாடகம் முத்தாய்ப்பாக அமைந்தது.

வள்ளிசுந்தரம்

© TamilOnline.com