அட்லாண்டாவில் சிவன் கோவில்
உலகில் முதன்முறையாக 108 உற்சவ சிவ மூர்த்திகளைக் கொண்ட சிவன் கோவில் அட்லாண்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது. இக் கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கே தேவியரான ஜகன்மோஹினி, பிரத்தியங்கரா, சூலினி, குப்சிகா தேவி, நீலி, சண்டி, அகோர பைரவி ஆகியோரும் பிரதிஷ்டை செய்யப்படுவர். சுமார் 20 மில்லியன் டாலர் செலவில் உருவாகும் இந்தக் கோவிலுக்கு கணிசமான தொகையைச் 'சித்தர்' கமாண்டர் செல்வம் அவர்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது. தவிர அவரது இந்திய ஆசிரமமும், உலகெங்கிலும் உள்ள அவரது சீடர்களும் இப்பணிக்கு நன்கொடை அளிக்கின்றனர். நார்கிராஸ் குளோபல்மால் அருகில் உள்ள இந்தக் கோவில் 10 ஏக்கர் நிலத்தில், 45,000 சதுர அடிக் கட்டிடம் உள்ள பழைய கிறித்தவத் தேவாலயம் இருந்த இடத்தில் உருவாகிவருகிறது.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 1.800.574.3472

தமிழில்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com