தெரியுமா?: சயினா: உலக நம்பர் ஒன்
பாட்மின்டன் வீரர் சயினா நெஹ்வால் உலக அளவில் நம்பர் ஒன் என்று உலக பாட்மின்டன் பேரவை அறிவித்துள்ளது. இந்தச் சிகரத்தைத் தொடும் முதல் இந்தியப் பெண்மணி இவர்தான். 25 வயதான சயினாதான் ஒலிம்பிக்ஸ் பாட்மின்டனில் பதக்கம் வாங்கிய முதல் இந்தியரும் ஆவார். 'இந்தியா ஓபன் சூப்பர் சீரிஸ்' தொடங்கிய முதல் ஆண்டிலேயே அந்தச் சாம்பியன்ஷிப்பையும் மார்ச் 29, 2015 அன்று வென்று மேலுமொரு சாதனை புரிந்திருக்கிறார். இதற்காக அவர் முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனாக் இன்டனோனை ஓர் அசாத்தியமான கேமில் தோற்கடித்தார்.

"நீ ஒரு ஒலிம்பிக் மெடல் கொண்டு வா என்றுதான் என் தாயார் என்னிடம் கூறினார். உலக நம்பர் ஒன் ஆவேன் என்று கற்பனைகூடச் செய்யவில்லை" என்கிறார் முகத்தில் சந்தோஷம் கொப்பளிக்க சயினா.



© TamilOnline.com