Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்!
அன்புமணி Vs வேணுகோபால்!
என்.எல்.சி. நிறுவனங்களின் பங்குகள்!
நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் சிலை!
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeநடிகர் திலகம் சிவாஜிகணேசனை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு சிலை ஒன்றை சென்னை கடற்கரையில் நிறுவியுள்ளது. கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது.

முன்னதாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு சிலை வைப்பதில் அதிக ஆர்வம் கொண்டு, சிலை வைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்தது. குறிப்பாக முதல்வர் கலைஞர் சிலைக்கான இடத்தை நேரில் சென்று பார்த்து ஒப்புதல் அளித்தப்பின், அந்த இடத்தில் சிலை நிறுவப்படுவதற்கான ஏற்பாடுகள் துரிதப் படுத்தப்பட்டு, சிலை திறப்பதற்கான தேதியும் முடிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் விடுதலை போராட்டத் தியாகியான சீனிவாசன் என்பவர், காந்திசிலை அருகே சிவாஜிகணேசன் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். குறிப்பிட்ட அந்த இடத்தில் சிவாஜிசிலை வைத்தால் அருகில் உள்ள காந்திசிலை மறைக்கப்படுவதாகவும், அதனால் சிவாஜி சிலையை வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி பிரபா, ஸ்ரீதேவன் ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இவ்விழக்கின் தீர்ப்பு வரும் வரை சிவாஜி சிலை திறப்பு விழாவை ஒத்திவைக்கும் படி அரசுக்கு யோசனை தெரிவித்தது. மேலும் தற்போது சிவாஜிகணேசன் சிலையை நிறுவியுள்ள இடம் திருப்திகரமாக இல்லை என்றும், மாற்று இடத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி இரண்டு, மூன்று இடங்களுக்கு நேரிடையாகச் சென்ற பார்வையிட்டும் எந்த இடமும் திருப்தியளிக்காததால் தற்போது உள்ள இடத்திலேயே தொடர்ந்து இருக்க முடிவு செய்தார். அரசின் இந்த முடிவை கேட்ட நீதிபதிகள் இவ்வழக்கிற்கான விசாரணையின் முடிவில் சிவாஜி சிலை தற்போது உள்ள இடத்திலேயே இருக்கலாம் என்று கூறியதை அடுத்து சிவாஜியின் 8 அடி உயர சிலையை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

திறப்புவிழாவிற்கு திரைப்பட நடிகர், நடிகைகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

கேடிஸ்ரீ
More

உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்!
அன்புமணி Vs வேணுகோபால்!
என்.எல்.சி. நிறுவனங்களின் பங்குகள்!
Share: 




© Copyright 2020 Tamilonline