Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
அதுவா முக்கியம்
முரண்கள்
மங்கலப் பொங்கல்
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|ஜனவரி 2004|
Share:
மாதவன் மனமகிழ் மார்கழி நிறைந்து
பூதலம் மகிழத் தைமகள் வந்தாள்
ஆதவன் திருத்தேர் வடதிசை திரும்பிட
சோதிச் சுடரென வந்தது நன்னாள்.

சேற்று வயலைத் தாயெனப் போற்றி
ஏற்றக் கால் நீர் ஏற்ற மளித்திட
நாற்றுக் கழனியை நாடி உழைத்தவர்
தூற்றிக் குவித்திடச் சேர்ந்தது செந்நெல்.

தாளாண் முயன்று தயங்கா துழைக்கும்
வேளாண் குடிமகன் பேணி வளர்த்திடத்
தாளும் தோகையும் தலைத்தலை ஆட்டி
நாளும் நிமிர்ந்து நகைத்தது கன்னல்.

செஞ்சுடர்ப் பொன்னோ என்று மினுங்கும்
வஞ்சியர் மங்கலம் நாடி வணங்கும்
மஞ்சளும் மருந்தாய் மாந்தரைக் காக்கும்
இஞ்சியும் செழித்து இலையசைத் தாடின.
வண்ணத் தோரணம் வாவென் றழைக்க
மண்மிசை வண்ணக் கோலம் மிளிர
சுண்ணம் பூசிய சுவர்கள் மின்னிடப்
புண்ணிய காலம் சேர்ந்தது இன்று.

தேவன் கதிரவன் திருவடி உன்னி
மேவிப் பூண்செய் பாண்டம் நிறைத்து
ஆவின் பாலை அடுப்பினில் ஏற்றிக்
கூவிக் குலவை யிட்டனர் பெண்டிர்.

மங்கலம் பொங்க வந்தது பொங்கல்
மாக்களும் மகிழ வந்தது பொங்கல்
செங்கதி ருக்கு நன்றி யுரைத்தே
பொங்குது எங்கும் பொங்கலோ பொங்கல்!

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

அதுவா முக்கியம்
முரண்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline