Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி
Tamil Unicode / English Search
சின்னக்கதை
பக்தியின் சக்தி
- |ஜூன் 2018|
Share:
கொல்கத்தாவில் இருக்கும் காளி கோவிலைக் கட்டியவர் ராணி ராஸமணி. ஒருமுறை அந்தக் கோவிலில் இருந்த கிருஷ்ண விக்கிரகம் கீழே விழுந்து அதன் கால் சிறிது உடைந்துவிட்டது.

ஆகம சாஸ்திரங்களின்படி, உடைந்த சிலையை வழிபடக்கூடாது என்று பல பண்டிதர்கள் கூறினர். அதனால் ஒரு புதிய சிலையை வடிக்க ராணியார் ஏற்பாடு செய்தார்.

இதைக் கேள்விப்பட்டார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் ராணியாரிடம், "மகாராணி, உங்கள் மருமகனின் கால் உடைந்துவிட்டது என்று வைத்துக்கொள்வோம், அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? என்ன செய்வது சரியாக இருக்கும்? காலில் கட்டுப்போட்டு, அதைக் குணப்படுத்துவீர்களா? இல்லை, அவரை ஒதுக்கிவிட்டு வேறொரு மருமகனைக் குடும்பத்தில் சேர்த்துக்கொள்வீர்களா?" என்று கேட்டார்.

பண்டிதர்களும் மூத்தோரும் வாயடைத்துப் போயினர்; கிருஷ்ணரின் பாதம் செப்பனிடப்பட்டது. அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து முன்போல வழிபடத் தொடங்கினர்.

பக்தி தூயதாகவும், உயர்ந்ததாகவும் இருந்தால், உடைந்த விக்கிரகம் ஒன்றில்கூடப் பிரபு எழுந்தருளுவார். இதுவும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள தர்மம்தான்.

நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்டு 2016
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா
Share: 




© Copyright 2020 Tamilonline