Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடித்தது
Tamil Unicode / English Search
அஞ்சலி
வானதி திருநாவுக்காரசு
ம.வே.சிவகுமார்
- |பிப்ரவரி 2016|
Share:
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளரும் நாடகம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான ம.வே. சிவகுமார் (61) காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய ஆர்வம் மிகுந்திருந்த இவரது எழுத்துப்பயணம் கணையாழியில் துவங்கியது. தொடர்ந்து கல்கி, அமுதசுரபி, தினமணி கதிர், ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் வாசக கவனம் பெற்றன. நாடகத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் பல நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கினார். தொலைக்காட்சித் தொடர்களுக்கும் கதை-வசனம் எழுதினார். திரைப்படத்துறைமீது கொண்ட ஆர்வம் காரணமாக அத்துறையிலும் கால் பதித்தார். அங்கு இவருக்குக் கிடைத்த அனுபவங்கள் தீரா மன அழுத்தத்தை உண்டாக்கின. புகைப்பழக்கமும் மன அழுத்தமும் இவரை இதய நோயாளியாக்கின. திரைப்படத்துறையில் சாதித்தே தீருவேன் என்ற இலட்சியத்துடன் இயங்கி வந்த இவர் திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவருக்கு இந்துமதி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
ம.வே.சிவகுமார் பற்றி வாசிக்க
More

வானதி திருநாவுக்காரசு
Share: 




© Copyright 2020 Tamilonline