Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
அரங்கேற்றம்: சங்கவை கணேஷ்
சிகாகோ: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: அனிகா ஐயர்
BATM: முத்தமிழ் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
அரங்கேற்றம்: தீக்ஷா கந்தன்
கலியன் சம்பத் இலக்கிய உரை
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
நியூ ஜெர்சியில் அன்னை மரியின் தேர்த்திருவிழா
சியாட்டல்: நூல் வெளியீடு
டொரொன்டொ: 'ஸ்டார் நைட்' நாடகம்
பராசக்தி ஆலயம்: வைகாசி விசாகத் திருவிழா
சுதேசி ஐயா
அரங்கேற்றம்: மதுரா ராமகிருஷ்ணன்
- பூரணா சேதுராமன், மணி குணசேகரன்|ஆகஸ்டு 2014|
Share:
ஜூன் 8, 2014 அன்று சிகாகோ நகரின் ஆஸ்வீகோ மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில், 'நிருத்ய சங்கீத்' கலைப் பள்ளி மாணவி செல்வி. மதுரா ராமகிருஷ்ணனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. ஜார்ஜியா தொழில்நுட்பக் கல்லுரியில் வேதிப்பொறியியல் படிக்க இருக்கும் மதுரா பதினான்கு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு அரங்கேறுகிறார். குரு திருமதி. சௌம்யா குமரனின் பயிற்சியில், மதுரா கம்பீர நாட்டையில் மல்லாரி தொடங்கிய விதமே அற்புதம். அடுத்து திலங் ராகத்தில் விநாயகர் ஸ்துதியைத் தொடர்ந்தார். மதுரை முரளீதரன் இயற்றிய "மாயே மனம் கனிந்து" (சிம்மேந்திர மத்யமம்) வர்ணத்திற்கு மதுரா விறுவிறுப்புடன் ஆடினார். இதற்கு குரு சௌம்யா அமைத்திருந்த அபிநயங்களும், அவரது சிறப்பான நட்டுவாங்கமும் பலத்த கரவொலி பெற்றன.

பாரதியாரின் "தீராத விளையாட்டுப் பிள்ளை", செங்சுருட்டியில் "வள்ளி கணவன் பேரை" என்னும் காவடிச்சிந்து, "சங்கர ஸ்ரிகிரி" (ஹம்சாநந்தி), ஆகியவை வெகு நேர்த்தி. டாக்டர். பாலமுரளி கிருஷ்ணாவின் குந்தளவராளி தில்லானாவில் விறுவிறுப்பான ஜதியுடன் சென்ற நிகழ்ச்சி மங்களத்துடன் இனிதே நிறைவேறியது.
திரு. முரளி பார்த்தசாரதி (வாய்ப்பாட்டு), திரு. M.S. சுகி (மிருதங்கம்), திரு. N. வீரமணி (வயலின்) ஆகியோர் சிறந்த பக்கபலமாக இருந்தார்கள். சௌம்யா குமரன் இனிய குரலில் நட்டுவாங்கம் செய்தார். இவர் கலைமாமணி திரு. காத்தாடி ராமமூர்த்தியின் மகள் ஆவார்.

இறுதியாக மதுராவின் பெற்றோர் ராமகிருஷ்ணன் மற்றும் பொம்மு மனநெகிழ்வுடன் நன்றி கூறினர். மதுரா படிப்பு, நடனம் மட்டுமல்லாமல், பொதுச் சேவையிலும் ஈடுபடுவது தங்களுக்கு பெருமை என்றும் குறிப்பிட்டார்கள்.

பூரணா சேதுராமன், நேப்பர்வில்;
மணி குணசேகரன், ரோமியோவில்
More

அரங்கேற்றம்: சங்கவை கணேஷ்
சிகாகோ: வறியோர்க்கு உணவு
அரங்கேற்றம்: அனிகா ஐயர்
BATM: முத்தமிழ் விழா
பாரதி தமிழ்ச் சங்கம்: அன்னபூர்ணா
அரங்கேற்றம்: தீக்ஷா கந்தன்
கலியன் சம்பத் இலக்கிய உரை
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: இயல் விருது விழா
நியூ ஜெர்சியில் அன்னை மரியின் தேர்த்திருவிழா
சியாட்டல்: நூல் வெளியீடு
டொரொன்டொ: 'ஸ்டார் நைட்' நாடகம்
பராசக்தி ஆலயம்: வைகாசி விசாகத் திருவிழா
சுதேசி ஐயா
Share: 




© Copyright 2020 Tamilonline