Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
நந்தலாலா மிஷன்: விஜய கீதம்
தர்பார் ஃபைன் ஆர்ட்ஸ்: டாக்டர் விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் நிகழ்ச்சிகள்
FeTNA: தமிழ் விழா
அக்ஷயாவுக்கு உதவ 'வெங்கடா3'
- |ஜூன் 2013|
Share:
ஜூன் 16, 2013 அன்று மாலை 4.30 மணிக்கு, அபிராமி கலை மன்றத்தின் சார்பில் ஒய்.ஜி. மகேந்திரனின் டைரக்‌ஷன் மற்றும் நடிப்பில் பாலோ ஆல்டோ ஸ்பாகன்பெர்க் தியேட்டரில் 'வெங்கடா3' என்ற நாடகம் நடைபெற இருக்கிறது. சி.என்.என் டாப் 10 நாயகர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயணன் கிருஷ்ணன் அவர்களின் அக்‌ஷயா டிரஸ்டிற்கு நிதியுதவி செய்யும் நோக்கத்துடன் இந்நாடகம் நடத்தப்படுகிறது. நாடக விமர்சனம் படிக்க

சினிமா, நாடக நடிகராகவும், இயக்குனராகவும், நகைச்சுவை மன்னராகவும் இருக்கின்ற ஒய்.ஜி. மகேந்திரன் கலையுலகச் சேவையில் 50 ஆண்டுகள் முழுமை செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் என்கிற நாடகக்குழுவை 1952ம் ஆண்டு அவரது தந்தை துவக்கி வைத்தார். 60 ஆண்டுகளைத் தாண்டி 62 தயாரிப்புக்களை வழங்கிவிட்டது இக்குழு. பதினோரு வயதிலிருந்தே நடிக்க ஆரம்பித்த ஒய்.ஜி.எம் இன்று வரையில் ஐயாயிரம் முறைகளுக்கு மேல் மேடைகளில் தோன்றியிருக்கிறார். 'நாடக திலகம்' போன்ற பல பட்டங்களைப் பெற்ற இவர், வெங்கடா3யை இயக்கி, 3 வேடங்களில் நடித்தும் இருக்கிறார். இவரோடான உரையாடல் வாசிக்க
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் தனக்கு முன்னுதாரணம் என்கிறார் மகேந்திரா. ஆனால் ஒய்.ஜி.எம்.மின் நடிப்பில் நடிகர் திலகத்தின் பாதிப்பை நாம் பார்க்க முடியாதது பெரிய வெற்றிதான். நல்ல நடிகர்களிடமிருந்து ஊக்கம் பெற வேண்டுமே தவிர, அவர்களைப் பிரதிபலிக்கக் கூடாது என்று சொல்வதுடன், அதைக் கடைப்பிடிக்கிறார் மகேந்திரன். நடிகைகள் லக்ஷ்மி, சௌகார் ஜானகி, சோ, மௌலி போன்றவர்கள் இவரது குழுவில் நடித்தவர்கள்தாம். சிகாகோவில் நாடகத்தில் ஆர்வமுள்ள கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுடைய குழுவுடன் சேர்ந்து இப்போது வளைகுடாப் பகுதியில் வெங்கடா3யை வழங்க இருக்கிறார். வெங்கடா3யில் நடிக்கும் ரெங்கா, மணிகண்டன் ஆகியோர், சிகாகோவில் நடந்த அபிராமி கலைமன்றத்தின் பொன்னியின் செல்வன் நாடகத்தில் பங்கேற்றுச் சிறப்புச் சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
More

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
நந்தலாலா மிஷன்: விஜய கீதம்
தர்பார் ஃபைன் ஆர்ட்ஸ்: டாக்டர் விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் நிகழ்ச்சிகள்
FeTNA: தமிழ் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline