Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | கவிதை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - கவிதை
பனைமரம்
- செங்காளி|ஜனவரி 2012||(1 Comment)
Share:
முளைப்பாய் தானாக மழைநீரே போதுமென்பாய்
கிளையின்றி வளர்ந்திடுவாய் உன் குடும்பமே தோப்பாக

கறுப்பு நிறத்தோடு கரடுமுரடாய்த் தோன்றிடுவாய்
நறுக்கென்று நெடுமரமாய் நிமிர்ந்து நீ நின்றிடுவாய்

பாளையைச் சீவி விட்டால் பதனீர் சுரந்திடுவாயதை
ஆலையில் காய்ச்சிவிட்டால் ஆகிடுவாய் கருப்பட்டி

தெளிவு என்றவொரு தெள்ளமுதைத் தந்திடுவாய்
களிப்பவர் திளைப்பதற்குக் கள்ளையும் கொடுத்திடுவாய்

பங்குனி வெய்யிலிலே பங்கிட்டுச் சுவைத்திடவே
நுங்கையும் குலைகுலையாய் நிறையத் தந்திடுவாய்

மருந்திற்கும் விருந்திற்கும் மற்றும் சிறுவர்க்கும்
கரும்பின் சுவை போன்ற கற்கண்டைக் கொடுத்திடுவாய்

நிழல்தரா மரமென்று நிந்திக்கும் சிலருக்கு
பழந்தன்னைத் தந்துமிகப் பரிகாரம் தேடிடுவாய்

மண்ணில் உன் கிழங்கை மறைத்து வைத்திருப்பாய்
உண்ணவே மக்களுக்கு உளமார வழங்கிடுவாய்

வீடுகள் கட்டிடவே விட்டமாய் மாறிடுவாய்
ஓடுகள் சுடுமென்று ஓலைகளால் கூரையாவாய்

பெட்டி முடைய, வெடி சுற்ற, புழுக்கம் தீர் விசிறி செய்ய,
தட்டி கட்ட ஓலைகளைத் தடையின்றி அளித்திடுவாய்

அடுப்பெரிக்க மட்டையையும் அத்தோடு கருக்குகளும்
கொடுத்திடுவாய் அவுணியையும் கூடை பின்ன நீயும்தான்

இதற்கெல்லாம் மேலாக,

தமிழெழுதத் தரமான தாள்களைத் தந்தாய் உன்
புகழென்றும் நிலைத்திருக்கும் பனைமரமே பனைமரமே!!

*****


குறிப்பு:
தெளிவு - பதநீர் (சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தெளுவு என்றும் கூறுவார்கள்)
அவுணி - பனை மட்டையைத் தண்ணீரில் ஊற வைத்து கத்தியால் கீறி எடுத்தால் வரும் கெட்டியான நீர்.
செங்காளி,
கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline