Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
பொது
வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது
பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமெனோ நூறாவது பிறந்த நாள் விழா
எமெனோவின் நன்கொடை
தமிழ் சோறு போடுமா? - அனுபவம்
பச்சை மனிதன்
தமிழன் வழிகாட்டி 2004 வெளியீடு
எஸ்.என்.பிரபு: பக்திப் பாடல் குறுந்தகடுகள்
- சூப்பர் சுதாகர்|பிப்ரவரி 2004|
Share:
ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு வழிபாட்டு முறையை எடுத்துக் கூறிய நம் முன்னோர்கள், கலியுகத்திற்கு 'நாம சங்கீர்த்தனம்' - அதாவது, இறைவனது புகழையும், மகிமையையும் பாடுவதே சிறந்தது என்று கூறியுள்ளனர். இவ் வகையில் 'அருள்தரும் தெய்வங்கள்' மற்றும், 'சர்வம் சாய்ராம்' என்ற இரண்டு பக்தி இசைக் குறுந்தகடுகளைப் பாடி வெளியிட்டுள்ளார் விரிகுடாப் பகுதிப் பாடகர் எஸ்.என். பிரபு (சிவராமன் பிரபு). இவர் 'சுரபி' இசைக்குழுவின் முதன்மைப் பாடகர்.

'அருள்தரும் தெய்வங்கள்' பாடல்களுக்கு இசையமைத் துள்ள ஏ.சி. தினகரன் எம்.எஸ். விஸ்வநாதனோடு நெருங்கிப் பணியாற்றியவர். பாடல்களை இ. மணி இயற்றியுள்ளார். கணபதி, சிவன், கோவிந்தன், கண்ணன், முருகன், லக்ஷ்மி, சரஸ்வதி, மாரியம்மன், ஹனுமான் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு கர்நாடக ராகத்தில் பாமாலை தொடுத்துள்ளார்கள். பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக, மனதைத் தொடுவதாக உள்ளன. பாடலுக்கு ஏற்றபடித் தனது குரலை மாற்றிப் பாடியுள்ள பிரபுவின் குரல்வளம் நம்மை வியக்க வைக்கிறது. இந்தத் தகட்டில் இறுதியில் வேகமான கதியில் அமைக்கப்பட்டுள்ள 'முருகா முருகா' என்ற ஆங்கிலப் பாடல் புதுமையான முயற்சி. இது நிச்சயம் இளைய தலைமுறையினரைக் கவரும். 'அருள்தரும் தெய்வங்கள்' பாடல்கள் மனதிற்கு இதம்தரும்.

'சர்வம் சாய்ராம்' இசைக் குறுந்தகட்டில், ஸ்ரீ ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பல மொழி பஜனைப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்குப் புதிய இசைவடிவம் கொடுத்துள்ளனர் பாடகர் பிரபு, இசையமைப்பாளர் ஏ.சி. தினகரன் குழுவினர். இதில் உள்ள பாடல்கள், ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர்களை மட்டும் இல்லாமல், மற்றவர்களையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தரமான இசை குறுந்தகடுகளை 16 மணி நேரத்தில் பாடி, ஒலிப்பதிவு செய்தார்கள் என்பதைக் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தக் குறுந்தகடுகளின் விலை ஒவ்வொன்றும் $10. இவற்றின் விற்பனையில் வரும் நிதியில் ஒரு பகுதியை முதன்மையாகக் காஞ்சி மடம், புட்டபர்த்தி ஆகியவற்றின் நற்பணிகளுக்கும், இதர குழுக்களின் சமூகப் பணிகளுக்கும் நன்கொடையாகத் தர இருப்பதாகச் சொல்கிறார் சான் ஹோசேயில் வாழும் பாடகர் பிரபு.
'அருள்தரும் தெய்வங்கள்', மற்றும், 'சர்வம் சாய்ராம்' குறுந்தகடுகளை வாங்க:
தொலைபேசி: 408-578-8281 (சிவராமன் பிரபு);
மின்னஞ்சல்: sivaraman_prabhu@hotmail.com
http://www.surabhee.net/Album.htm, http://www.chennaionline.com/society/musictoears.asp

தகவல்: சூப்பர் சுதாகர்
More

வெங்கட் சாமிநாதனுக்கு கனடாவில் இயல் விருது
பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமெனோ நூறாவது பிறந்த நாள் விழா
எமெனோவின் நன்கொடை
தமிழ் சோறு போடுமா? - அனுபவம்
பச்சை மனிதன்
தமிழன் வழிகாட்டி 2004 வெளியீடு
Share: 




© Copyright 2020 Tamilonline