Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
ஓர் ஏழை மாணவனின் கொரோனா கால ஏக்கம்
- பர்வீன் சையது|செப்டம்பர் 2020|
Share:
பள்ளிக்கூடம் மூடிப் பல மாதங்களாயிடுச்சு
பள்ளிச்சீருடை பெட்டியில் தூங்கிப்போச்சு!

மணியோசை காதில் விழுந்து நாளாச்சு
மதிய சத்துணவும் இல்லாமலே போச்சு!

வெயிலோடு விளையாடி ரொம்ப நாளாச்சு
பட்டாம்பூச்சியாய் சுற்றியதெல்லாம் கனவாச்சு!

நட்புக்கள் பூத்த இடம் மௌனத்தில் முழுகிடுச்சு
மரத்தடியில் உண்ட நாட்கள் மறந்தேபோச்சு!

ஆன்லைன் பாடமோ எட்டாக் கனியாச்சு
மின்னணு உபகரணங்கள் இல்லாமல் போச்சு!

இனணயதளமும் ஏழையோடு இணைய மறுத்திடுச்சு
நாலு சுவற்றுக்குள் முடங்கி எத்தனை நாள் ஆயிடுச்சு!

விடுமுறையே இப்ப பாரமாகிப் போயிடுச்சு
பள்ளி திறக்கும் நாளுக்கு மனம்மிக ஏங்கிடுச்சு!
பர்வீன் சையது,
ரோச்செஸ்டர் ஹில்ஸ், மிச்சிகன்
Share: 




© Copyright 2020 Tamilonline