Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சிகாகோ: தங்கமுருகன் விழா
டாலஸ் 'கருணா': நிதி திரட்ட மெல்லிசை
- செய்திக்குறிப்பிலிருந்து|மார்ச் 2018|
Share:
மார்ச் 31, 2018 சனிக்கிழமை அன்று பிற்பகல் 'High Octavez' இசைக்குழுவினர் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவ நிதி திரட்டுவதற்காக, பிற்பகல் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இரண்டு மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். நடைபெறும்

இடம்: Liberty High School Auditorium, 15250 Rolater Rd, Frisco, TX 75035.

High Octavez - Karuna - Compassion for Humanity என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2010ம் ஆண்டு டாலஸ் நண்பர்களால் தொடங்கப்பட்டது. புற்றுநோயால் துன்பப்படும் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலருக்கும் உதவிக்கரம் நீட்டும் இந்த அமைப்பு, பயனாளரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்ட பின்னரே உதவுகிறார்கள்.

இசை ஆர்வத்தால் இந்தக்குழுவை நடத்தி வந்த நண்பர்கள், புற்றுநோயால் அமெரிக்காவில் இருந்து படிப்பை விட்டு இந்தியா சென்ற மாணவனுக்காக, முதன்முதலாக 2011ம் ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். 'கருணா' என்ற பெயரில் தன்னார்வ அமைப்பாகப் பதிவு செய்து Nonprofit, 501 வரிவிலக்குப் பெற்றனர்.

இந்தியாவில் இயங்கி வரும் Regional Cancer Center (RCC) அமைப்பு மூலம் புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு உதவி வருகிறார்கள். எவருக்காக நிதி திரட்டப்படுகிறதோ, அவருக்கு மட்டுமே அந்தத் தொகை அளிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். சிகிச்சைக்குப் பின்னும், நோயாளியிடம் தொடர்ந்து அவரது உடல்நிலை பற்றி அறிந்து கொள்கிறார்கள். அவர்கள் கருணா அமைப்பின் குடும்ப உறுப்பினர் ஆகிவிடுகிறார்கள். ஒருவேளை, சிகிச்சைக்கு முன்னரே நோயாளி இறந்து விட்டால், தொகை அவரது குடும்பத்தினருக்குத் தரப்படுகிறது. ஓரளவு இழப்பை ஈடுசெய்ய உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் 90 குடும்பங்கள் நிதி பெற்றுப் பயனடைந்துள்ளன.


கருணா உறுப்பினர்கள் நடத்தும் 'பாயசத் திருவிழா', வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளுடன் நடத்தப்படும் தீபாவளித் திருவிழா ஆகியவை மூலமாகவும் நிதி திரட்டப்படுகிறது.

அமெரிக்காவில் வறியோருக்கு உதவும் சில திட்டங்களையும் செயல்படுத்துகிறார்கள். ஏதிலி இல்லத்தில் வாழும் மக்களுக்குக் குழந்தைகளால் தயாரிக்கப்பட்ட உணவுகள் (Sandwich Packets) மாதம் ஒருமுறை வழங்கப்படுகின்றன. சிறார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளுக்கு, குழந்தைகளே உருவாக்கிய போர்வைகள் கிறிஸ்துமஸ் பரிசாக அளிக்கப்படுகிறது. இர்விங் பள்ளிக்குழந்தைகளுக்கு, பள்ளிக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய 100 தோள்பைகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

மேலும் தகவலுக்கு: contactus@highoctavez.org
நுழைவுச்சீட்டு வாங்க: www.highoctavez.net

செய்திக்குறிப்பிலிருந்து
More

சிகாகோ: தங்கமுருகன் விழா
Share: 




© Copyright 2020 Tamilonline