Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
புதிய கதை
- பழமைபேசி|ஜூலை 2014|
Share:
நான் சொன்ன கதையை
தன் தங்கைகளுக்கு
சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தான் சொல்லும் புதிய கதை ஒன்றை
ஆவலுடன்
தகப்பன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
என்பது!

*****


முதல் ஊதியம்

இந்தாங்ப்பா
என்றேன்!
அம்மாகிட்ட
குடுப்பா என்றார்!
உவப்பு
இரட்டிப்பானது
அம்மா
அப்பா
நான்
எல்லாருக்கும்!

*****
அவள்

நீ நல்லாயிருக்கியா
எனக் கேட்டேன்?
நீ எப்பிடியிருக்கே
என்றாள் அவள்.
நான் நல்லா இருக்கேன்
என்றதும் துளிர்ப் புன்னகை!
நலமாய் இராதவள்
நலமானதைப் போல!

பழமைபேசி,
சென்டர்வில், டென்னசி
Share: 




© Copyright 2020 Tamilonline