Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
மாயாபஜார்
தேங்காய் அரிசிப் பாயசம்
மகாராஷ்டிர ஸாபுதானா (ஜவ்வரிசி) கிச்சடி
- காமாட்சி ரெங்கராஜன்|செப்டம்பர் 2013|
Share:
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 300 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - இரண்டு
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை

செய்முறை
ஜவ்வரிசியைத் தண்ணீர் ஊற்றிக் களைந்து நீரில் 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அதை வடிகட்டி ஒரு துணியில் 2 மணிநேரம் நிழலில் உலர்த்தவும். வேர்க்கடலையை எண்ணெய் இல்லாமல் வறுத்துத் தோலை நீக்கவும். அதை மிக்ஸியில் பொடி செய்து ஜவ்வரிசியுடன் கலந்து கொள்ளவும். கனமான வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், தோல் நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கு எல்லாவற்றையும் போட்டு நன்றாக வதக்கவும். அதில் ஜவ்வரிசி வேர்க்கடலை கலவையைச் சேர்க்கவும். அடுப்பை நிதானமாக வைத்துக் கிளறி கனமான தட்டைப்போட்டு மூடவும். 3 நிமிடம் விட்டு, கிளறி விடவேண்டும். உப்பை தேவைக்கேற்பச் சேர்த்துப் பெருங்காயப் பொடியைப் போடவும். சிறிது கிளறிவிட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து கொத்துமல்லித் தழையைத் தூவி இறக்கவும். இதை விரத காலத்தில் எடுத்துக் கொள்வர்.
காமாட்சி ரெங்கராஜன்,
சான்ரமோன், கலிஃபோர்னியா
More

தேங்காய் அரிசிப் பாயசம்
Share: 




© Copyright 2020 Tamilonline