Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நலம்வாழ
கருப்பை அணுக்களின் இடமாற்றம் (Endometriosis)
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஜூன் 2011|
Share:
Click Here Enlargeஇடமாற்றத்தினால் ஏற்படும் சவால்கள் நாம் அறிந்ததே. கருப்பையின் செல்கள் இடம்பெயர்ந்து சென்று வெவ்வேறு உறுப்புகளில் தங்கி அதனால் விளையும் நோயான 'Endometriosis' பற்றி இங்கே பார்க்கலாம். ஒரு வகையில் இது சென்ற

இதழின் தொடர்ச்சி என்று சொல்லலாம். கருத்தடை மாத்திரைகள் பற்றிய கட்டுரையில் இந்த நோய்க்குத் தீர்வாகக் கருத்தடை மாத்திரைகள் உதவலாம் என்று பார்த்தோம். அந்த கட்டுரைக்கு வந்த கடிதங்களில் இந்த வியாதி பற்றி விவாதிக்கச்

சொல்லி வாசகர் விரும்பியதற்கு இணங்க, Endometriosis பற்றி இங்கு அலசுவோம். கருப்பையின் உள்ளே இருக்கும் செல்கள் குறிப்பிட்ட தன்மை வாய்ந்தவை. இவை சினைப்பை அல்லது சிறுகுடல் பெருங்குடல் பகுதிகளில் இடமாற்றம்

ஆகக்கூடும். இதனால் மாதா மாதம் வலி மற்றும் வேதனை ஏற்படலாம். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலி ஏற்படுவோர்களுக்கு இந்த நோய் இருக்கலாம்.

அறிகுறிகள்:
  • மாதா மாதம் மாதவிடாய் நேரத்தில் பொறுக்கமுடியாத வயிற்று வலி. இந்த வலி மாதவிடாய்க்குச் சற்று முன்னால் ஆரம்பித்துப் பல நாட்கள்வரை தொடரும். ஒரு சிலருக்கு முதுகு வலி, வயிற்று வலி தொந்தரவு இந்தக்

    காலகட்டத்தில் அதிகரிக்கும்.
  • உடலுறவின் போதும் வயிற்று வலி அதிகமாகும்.
  • வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படலாம். குறிப்பாக இந்த நேரத்தில் வயிற்று வலி அதிகரிக்கலாம். இந்த அறிகுறிகள் குறிப்பாக

    மாதா மாதம் தொடரும் போது இந்த நோய்க்கான சாத்தியக்கூறு அதிகம்.
  • மாதவிடாய் மிகவும் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு அதனால் ரத்த சோகை ஏற்படலாம்.
  • ஒரு சிலருக்கு மகப்பேறு பாதிக்கப்படலாம். கரு

    உருவாகாமல் தடை ஏற்படலாம்.


காரணங்கள்:
இந்த வியாதிக்கான காரணங்கள் அவ்வளவாக மருத்துவர்களுக்கே தெரிவதில்லை.

சினைப்பையில் இருந்து முட்டை கருப்பைக்கு வருவதுதான் சரியானது. அது கருவாக மாறாதபோது ரத்தப்போக்கு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு அது அப்படி நிகழமால் ரத்தப்போக்கு பின்னோக்கி கருப்பையிலிருந்து சினைப்பைக்குச் செல்லும்போது

இந்தச் செல்கள் இடமாற்றம் ஆகலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இது தவிர்க்க முடியாத சில காரணங்களால் இயற்கையாக நிகழ்கிறது. மகப்பேறைத் தள்ளிபோடுவது இதற்குக் காரணமாகலாம். குடும்பத்தில் அத்தை, அக்கா, அம்மா என்ற

உறவுக்காரர்களில் இந்த வியாதி அதிகமாக காணப்படலாம். மாதவிடாய் 27 நாட்களுக்குக் குறைவாக ஏற்படுவோருக்கு இதன் சாத்தியம் அதிகம். அடிவயிற்றில் ஏதேனும் நுண்ணுயிர்க் கிருமி தாக்கி, அதன் பின்விளைவாகவும் ஏற்படலாம்.

சரியாக மாதவிடாய் ஏற்படாமல் போக ஏதேனும் காரணம் இருந்தால் அதன் காரணமாகவும் இந்த வியாதி உருவாகலாம். இந்த வியாதி கருத்தரிக்கும்போது தற்காலிகமாகவும் மாதாவிடாய் நிற்கும்போது நிரந்தரமாகவும் குணமாகிறது.
பின்விளைவுகள்
இதனால் ஏற்படும் முக்கியப் பின் விளைவு கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதுதான். சினைப்பையிலிருந்து முட்டை கருப்பைக்கு வரும் வழி தடைப்படுவதால் விந்தணுவுடன் சேரமுடியாமல் போகிறது. பலருக்குச் சரியான முறையில் கரு உருவாகும்

வாய்ப்பு இருந்தாலும் நாள் ஆக ஆக கருத்தரிக்கும் வாய்ப்பு கணிசமாகக் குறைகிறது. இதனால் மருத்துவர்கள் இந்த வியாதி இருப்பதைக் கண்டறிந்தால் உடனடியாகக் கருத்தரிக்க அறிவுறுத்துவர். பல சமயம், கருத்தரிக்காதவர்களுக்குச்

செய்யப்படும் பரிசோதனைகளில் இந்த நோய் தெரியவருகிறது

பரிசோதனைகள்
உள்பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் (ultrasound) பரிசோதனைகள் மூலம் அறியலாம். இதற்கு அடுத்ததாக லேபரோஸ்கோபி (Laparoscopy) செய்ய வேண்டி வரலாம்.

தீர்வு முறைகள்
இது நோயாளியின் வயது, மகப்பேறுக்கான தேவை, நோயின் தீவிரம் முதலியவற்றை வைத்துத் தீர்மானம் செய்யப்படுகிறது. குழந்தை வேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்க வேண்டும். இதற்குச் சில

தற்காலிக நிவாரணங்களை மேற்கொள்ளலாம். வலி மாத்திரைகள் உதவும். கூடுமானவரை ஹார்மோன் மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும். மகப்பேற்றைத் தள்ளிப்போடமால் விரைந்து கருத்தரிப்பது நல்லது. நாளாக ஆகக் கருத்தரிக்கும்

வாய்ப்புக் குறைவது திண்ணம்.

கருத்தரிக்கத் தேவையில்லை அல்லது மகப்பேற்றை முடித்தவர்கள் பலவித ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். சென்ற இதழில் சொன்ன கருத்தடை மாத்திரைகளும், ஹார்மோன் சுரப்பதைத் தடுக்கும் மாத்திரைகளும், டனசால்

என்ற மாத்திரையும் மற்றும் ஆரோமடேஸ் தடுப்பு மருந்துகளும் உபயோகிக்கப் படலாம். இவை எல்லாவற்றிலும் சில பின்விளைவுகள் உண்டு. அதனால் மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை
லேபரோஸ்கோபி (Laparoscopy) முறையில் அறுவை சிகிச்சை செய்யலாம். இதன்மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம். நோய் முற்றிய நிலையில் வலி மிகவும் அதிகமாக இருப்பின் கருப்பை அறுவை சிகிச்சை செய்து எடுக்க

வேண்டி வரலாம். இது கடைசிக்கட்டத் தீர்வாகச் செய்யப்படுகிறது. மேலும் விவரங்களுக்குப் பார்க்க: http://www.mayoclinic.com/health/endometriosis

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline