Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
க்ரியா வழங்கிய 'கலக்கற சந்துரு பிரமாதம்'
மானஸா சுரேஷின் இரட்டை அரங்கேற்றம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய குழந்தைகள் தினவிழா
'லாஸ்யா' வழங்கிய விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம்
டெட்ராயிட் பாலாஜி வேத மையம்: உலக சாந்திக்காக ஹோமங்கள்
SIFA வழங்கிய ஊர்மிளா சத்யநாராயணாவின் பரதநாட்டியம்
- சீதா துரைராஜ்|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeநவம்பர் 6, 2005 அன்று தென்னிந்திய நுண்கலைக் குழுமத்தின் (SIFA) ஆதரவில் ஊர்மிளா சத்யநாராயணா அவர்களின் பரதநாட்டிய கச்சேரி CET, சான் ஹோசேவில் நடைபெற்றது.

கம்பீர நாட்டையில் ஜம்மென்று மல்லாரி முழங்க ஊர்மிளாவின் நடனம் துவங்கியது. தொடர்ந்து ராகமாலிகை வர்ணம் 'சாமியை அழைத்தோடி வா'. இதன் ஒவ்வொரு அடியிலும் ராகத்தின் பெயரோடு வரும் வரிகளின் அர்த்தபூர்வமான பாவங்கள், அருமையான அபிநயம் யாவும் ரசிக்கத் தக்கதாக நன்றாக இருந்தது. 'மாமதிமுகமோ கனலாய் வீச' என்னும் வரியை மோகன ராகத்தில் பாடும்போது காண்பித்த பாவம் மிகவும் தத்ரூபம். வர்ணம் நீளமாய் இருந்தாலும்கூட அடுத்தடுத்துக் காண்பித்த அசைவுகளில் அனயாச துள்ளலுடன் கூடிய சுறுசுறுப்பு, ஜதி சொல்கட்டு, தீர்மானங்கள் யாவும் நல்ல விறுவிறுப்பு.

அடுத்து ஜயதேவர் அஷ்டபதியில் ராதை கண்ணனை நினைந்து உருகுவதை தோழியிடம் சொல்வதை தத்ரூபமாக ஆடிய விதம், அன்னமாசார்யாவின் குறிஞ்சி ராகப் பாடலில் யசோதையின் வாத்சல்ய பாவத்தை அபிநயத்தில் காண்பித்தது கனஜோர்.

நிறைவாக ஊத்துக்காடு அவர்களின் காளிங்க நர்த்தன தில்லானா நிகழ்ச்சியின் மகுடம் எனச் சொல்லலாம். யமுனா தடாகத்தையும் காளிங்கனை வதம் செய்த கிருஷ்ணனையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதும், வேகமாக ஆடும்போது பாவபூர்வமாக ஆடுவதிலும் அக்கறை செலுத்தி தாளகதியுடன் இணைந்து ஆடியதும் மெச்சத்தக்கன.

பாட்டும் நட்டுவாங்கமும் இணைந்து தஞ்சாவூர் பாணிக்கு உரிய அழுத்தத்துடன் பாடிய தோடி வெகு நேரம் மனதில் ஓடியது. பாட்டு, வயலின், மிருதங்கம் வாசித்த குழுவினர் நிகழ்ச்சியை நன்கு சிறப்புறச் செய்தனர்.
சீதா துரைராஜ்
More

க்ரியா வழங்கிய 'கலக்கற சந்துரு பிரமாதம்'
மானஸா சுரேஷின் இரட்டை அரங்கேற்றம்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய குழந்தைகள் தினவிழா
'லாஸ்யா' வழங்கிய விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம்
டெட்ராயிட் பாலாஜி வேத மையம்: உலக சாந்திக்காக ஹோமங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline