Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: தமிழ்பாடும் பெண்
தெரியுமா?: மேரியட்டா தமிழ்ப்பள்ளி
தெரியுமா?: டாலஸ் ஃப்ரிஸ்கோவில் புதிய தமிழ்ப் பள்ளி
தெரியுமா?: பாலபுரஸ்கார்
படிக்கலாம் சிரிக்கக் கூடாது!
தெரியுமா?: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்
தெரியுமா?: சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார்
- |செப்டம்பர் 2013|
Share:
இளந் தலைமுறைப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்படுவது சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது. 35 வயதுக்குட்பட்டோருக்கான படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் இவ்விருதைக் கடந்த ஆண்டுகளில் ம. தவசி (2011), மலர்வதி (2012) ஆகியோர் பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான விருதுக்குப் பத்திரிகையாளரும் கவிஞருமான கதிர்பாரதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்' என்னும் கவிதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவரது முதல் கவிதைத் தொகுப்பு. கல்கி வார இதழில் தலைமைத் துணையாசிரியராகப் பணியாற்றி வரும் கதிர்பாரதியின் இயற்பெயர் செங்கதிர் செல்வன். சொந்த ஊர் தஞ்சையை அடுத்த பூதலூர். இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். டாக்டர் க. செல்லப்பன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், ரவி சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட நடுவர் குழு இந்நூலை விருதுக்குத் தேர்ந்தெடுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் விழா ஒன்றில் இந்த விருது வழங்கப்படும்.

More

தெரியுமா?: தமிழ்பாடும் பெண்
தெரியுமா?: மேரியட்டா தமிழ்ப்பள்ளி
தெரியுமா?: டாலஸ் ஃப்ரிஸ்கோவில் புதிய தமிழ்ப் பள்ளி
தெரியுமா?: பாலபுரஸ்கார்
படிக்கலாம் சிரிக்கக் கூடாது!
தெரியுமா?: அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline