Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
தமிழக அரசியல்
13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம்
வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்!
அரசியலில் குதிக்கும் கார்த்திக்
ஜெயேந்திரர் மீது மற்றுமொரு வழக்கு
ஏட்டிக்குப் போட்டி
- கேடிஸ்ரீ|ஜனவரி 2006|
Share:
Click Here Enlargeவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, கட்டி முடித்து ஐந்தாண்டுகளே ஆன அமராவதி பாலம் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பாலம் கட்டுவதில் ஊழல் நடந்ததா என்பதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் பாலத்தை அரசே எடுத்து நிர்வகிக்கும் என்றும் தெரிவித்தார்.

உடனடியாகத் தி.மு.க. தலைவர் கருணாநிதி சுனாமி நிதி வசூல் கணக்கையும், அதன் செலவு விவரங்களையும் விசாரிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. தவிர, சில மாதங்களுக்கு முன்பு கல்லக்குடி சிமெண்ட் தொழிற்சாலையில் கட்டடம் கட்டத் தமிழக அரசு ஒரே நாளில் இரண்டு உத்தரவுகள் பிறப்பித்தது குறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு அமராவதி நதிப் பாலத்தை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் புனரமைக்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையினால் ஏற்கெனவே பாலத்தைக் கட்டி, பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனத்துடனான கரூர் நகராட்சியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் அந்த பாலத்தை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கவரி வசூலிக்கப்படுவதும் உடனே கைவிடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் தமிழகம் முழுவதும் மக்கள் அல்லல்படும் வேளையில் நிவாரணப் பணிகளில் ஆக்கபூர்வமாகச் செயல்படாமல், தமிழகக் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறுவதும், அறிக்கைப் போர் தொடுப்பதும் மக்களிடையே மிகுந்த அதிருப்தியையே ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

கேடிஸ்ரீ
More

13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம்
வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்!
அரசியலில் குதிக்கும் கார்த்திக்
ஜெயேந்திரர் மீது மற்றுமொரு வழக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline