Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கச்சேரி: வர்ஷா ரவிகுமார்
பாஸ்டன்: பால கோகுலம் ஆண்டு விழா
சான் ஹோசே: பாலாஜி கோவில் கும்பாபிஷேகம்
அரங்கேற்றம்: ஸ்ரீநிதி திருமலை
ஹூஸ்டன்: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா!
மிச்சிகன்: வைகாசி விசாகம்
அரங்கேற்றம்: ரூபா ரவி
மெம்ஃபிஸ்: 'காதலிக்க நேரமுண்டு'
நிருத்யோல்லாசா: 'நிருத்யமாலா'
அரங்கேற்றம்: ஸ்ருதி சிவானந்தம்
- ரமாதேவி கேசவன்|ஜூலை 2013|
Share:
ஜூன் 1, 2013 அன்று செல்வி. ஸ்ருதி சிவானந்தத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் ப்ளெசன்டன் அமடோர் வேலி மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடந்தேறியது. ஸ்ருதி அதே மேல்நிலைப் பள்ளியில் இறுதியாண்டு மாணவி. சிறு வயதிலிருந்தே ஃப்ரீமான்ட்டில் உள்ள ஸ்ரீ லலித கான வித்யாலயத்தில் குரு திருமதி. லதா ஸ்ரீராமிடம் கர்நாடக இசை கற்று வந்துள்ளார். 'சாமி நின்னே' என்ற பட்ணம் சுப்ரமணிய ஐயரின் நாகஸ்வராளி வர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. பின்னர், நான்கு முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதிகளான 'சித்தி வினாயகம்' (ஷண்முகப்ரியா), 'பரதேவதா' (தன்யாசி), 'சுவாமிநாத பரிபாலயா' (நாட்டை), 'சிந்தயம்' (பைரவி) ஆகியவற்றைப் பாடி இசையின் வெவ்வேறு பரிமாணங்களில் தமது திறமையை வெளிப்படுத்தினார். ராக ஆலாபனை மற்றும் கல்பனா ஸ்வரங்களை சிறப்பாகப் பாடினார். தியாகராஜரின் 'சரச சாம தான' பாடியபின் நிகழ்ச்சியின் மையமாக 'பாவயாமி ரகுராமம்' என்ற சுவாதித்திருநாள் கீர்த்தனையை அருமையாகப் பாடினார். தியாகராஜரின் 'மோக்ஷமு கலதா', சதாசிவ பிரும்மேந்திரரின் 'பிபரே ராம ரசம்', சுவாதித் திருநாளின் 'பணி மதி முகி பாலே', நாமதேவரின் அபங் பாடலான 'பக்த ஜன வத்சலே' ஆகியவற்றால் கேட்டோரைப் பக்தி ரசத்தில் முழுக்காட்டினார். மகாராஜபுரம் சந்தானத்தின் சிவரஞ்சனி ராகத் தில்லானாவும், 'சிவனார் மனம் குளிர' என்ற திருப்புகழும் நிகழ்ச்சிக்கு நிறைவாக அமைந்தன.

ஸ்ருதி தனது நன்றியுரையை மனதின் ஆழத்திலிருந்து அளித்த விதம், குரு மற்றும் இசைப்பள்ளி மீது அவருக்கிருந்த மிகுந்த மதிப்பை வெளிப்படுத்தியது. குரு லதா ஸ்ரீராம் "அரங்கேற்றம் என்பது ஒரு தொடக்கமே" எனத் தனது வாழ்த்துரையில் கூறியது சிந்திக்கத் தகுந்தது. திரு. ரவீந்த்ர பாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திரு. கிருஷ்ணா பார்த்தசாரதி (வயலின்) ஆகியோர் சிறப்பான பக்கபலமாக அமைந்தனர்.
ரமாதேவி கேசவன்,
சான் ஹோசே
More

கச்சேரி: வர்ஷா ரவிகுமார்
பாஸ்டன்: பால கோகுலம் ஆண்டு விழா
சான் ஹோசே: பாலாஜி கோவில் கும்பாபிஷேகம்
அரங்கேற்றம்: ஸ்ரீநிதி திருமலை
ஹூஸ்டன்: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா!
மிச்சிகன்: வைகாசி விசாகம்
அரங்கேற்றம்: ரூபா ரவி
மெம்ஃபிஸ்: 'காதலிக்க நேரமுண்டு'
நிருத்யோல்லாசா: 'நிருத்யமாலா'
Share: 




© Copyright 2020 Tamilonline