Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
ராதிகா சங்கர், தாரா சங்கர் நாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
கவிதா திருமலையின் பரதநாட்டியம்
மாதவி வெங்கடேஷ் நாட்டிய நிகழ்ச்சி
தென் கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் 'வசந்தத்தில் ஓர் நாள்'
அபிநயா நாட்டியக் குழுவின் நாட்டிய நாடக விழா
ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
சித்தார்த்தின் இசைக் கச்சேரி
- சங்கீத ப்ரியை|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlargeபிப்ரவரி 10, 2007 அன்று சான்டா கிளாரா Convention Center-ல், சித்தார்த் ஸ்ரீராமின் கர்நாடக இசைக் கச்சேரி நடந்தது. பந்துவராளி வர்ணத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில், ஆரபி ராகத்தில் அமைந்த விநாயகர் மீதான தீட்சிதர் கிருதி சிறப்பாக இருந்தது. ஆனந்தபைரவியில் சியாமா சாஸ்திரிகளின் சவுக்க காலத்தில் அமைந்த 'ஓ ஜகதம்ப'வைக் காலப்ரமாணம் தவறாமல் அருமையாகப் பாடினார் ஸ்ரீராம். காவேரி ராகத்தில் அமைந்த சியாமா சாஸ்திரிகளின் 'சங்கரி'க்கு விரிவான ராக ஆலாபனை செய்த நிரவலும், கல்பனா ஸ்வரமும் அருமை. தியாகராஜரின் அடாணாவில் அமைந்த 'செடேபுத்தி' என்ற பாடலும், தேனுகா ராகத்தில் அமைந்த 'தெலிய§து ராம' பாடலும் சிறப்பாக இருந்தன. கல்யாணி ராகத்தில் அமைந்த 'பங்கஜலோசனா' பாடலின் நிரவலும் கல்பனா ஸ்வரமும் ஸ்ரீராமின் இசை ஞானத்தை வெளிப்படுத்தியது.

மிச்ரசாபு தாளத்தில் தனி ஆவர்த்தனம் செய்த நாரயணனின் மிருதங்கமும், மகாதேவனின் மோர்சிங்கும் சிறப்பு. வயலின் வாசித்த குமாரி திவ்யாவின் கல்யாணி ராக ஆலாபனை மிக இனிமையாக இருந்தது. ஸ்ரீராம் எடுத்துக் கொண்ட ராகங்கள் அனைத்துமே கன ராகங்களாக இருந்தன. தற்பொழுது பிரபல இசைக்கலைஞர்கள் சிலரைத் தவிர, மற்றவர்கள் ராகம், தாளம், பல்லவி பாடுவதே இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, ஸ்ரீராம் கரகர ப்ரியாவில் ராகம் தாளம் பல்லவி பாடி இசை ஞானத்தையும், சங்கீத ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினார்.
இறுதியில் திரு லால்குடி ஜெயராமனின் மோகன கல்யாணி தில்லானா, திருப்புகழுடன் கச்சேரி நிறைவடைந்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் சங்கீத மழையில் நனைய வந்திருந்தனர்.

சங்கீத ப்ரியை
More

ராதிகா சங்கர், தாரா சங்கர் நாட்டிய நிகழ்ச்சி
ஸ்ரீராம லலித கலா மந்திர்: ‘நவக்கிரக வழிபாடு’ இசை நிகழ்ச்சி
கவிதா திருமலையின் பரதநாட்டியம்
மாதவி வெங்கடேஷ் நாட்டிய நிகழ்ச்சி
தென் கலிபோர்னியா தமிழ் மன்றத்தின் 'வசந்தத்தில் ஓர் நாள்'
அபிநயா நாட்டியக் குழுவின் நாட்டிய நாடக விழா
ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline