Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
ஓம சாதம்
புதினா பாத்
கொத்துமல்லி சாதம்
- பிரேமா நாராயணன்|ஜனவரி 2012|
Share:
தேவையான பொருட்கள்:
பச்சைக் கொத்துமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
சீரகம் தாளிக்க - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம்
காரப்பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
புளி - சிறிதளவு
எண்ணெய்/நெய் - 1/2 தேக்கரண்டி
அரிசி - 1 கிண்ணம்

செய்முறை:
குக்கரில் அரிசியை உதிர் உதிராகச் சாதம் வடித்துக் கொள்ளவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், பச்சை கொத்துமல்லி கீரை, புளி, தேங்காய்த் துருவல் இவற்றைப் போட்டுச் சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய், நெய் இரண்டும் 1/2 தேக்கரண்டி விட்டுக் காய்ந்ததும் சீரகம் தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பொன்னிறமாக வதக்கிய பின் தக்காளியைப் போட்டு வதக்கவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள கொத்துமல்லிக் கலவையைச் சேர்த்து, தேவைக்கேற்ப மிளகாய்ப் பொடி (காரப்பொடி), உப்பு போட்டு நன்கு வதக்கவும். (சுமார் 5 நிமிடங்கள்). இந்தக் கலவையில் சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிதளவு நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பைச் சாதத்தில் சேர்த்துப் பரிமாறலாம். உருளை வறுவலோடு சாப்பிட வெகு சுவை.
பிரேமா நாராயணசுவாமி,
ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா
More

ஓம சாதம்
புதினா பாத்
Share: 




© Copyright 2020 Tamilonline