Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3'
ரம்யாவுக்கு 'லாஸ்ய யுவ பாரதி' விருது
தேவை: பெர்க்கலி தமிழ்ப் பிரிவுத் துணைப் பேராசிரியர்
கேட்க ஒரு தென்றல்!
ஆமை வேகம்!
- தென்கச்சி கோ. சுவாமிநாதன்|டிசம்பர் 2011|
Share:
நகைச்சுவைங்கறது மனுஷனுக்கு மட்டுமே உள்ள ஒண்ணு. மிருகங்களுக்கு அந்த உணர்வு கிடையாது. அதுனால வருத்தம் அடைஞ்ச விலங்குகள் எல்லாம் ஒண்ணாச் சேந்து, நமக்கும் நகைச்சுவை உணர்வு வேணும். அதுக்காக எல்லா

மிருகங்களும் ஒரு நகைச்சுவை சொல்லணும். அதை கேட்டு மத்த எல்லா மிருகங்களும் சிரிக்கணும் அப்பட்டின்னு ஒரு போட்டி வச்சது. சிங்கம் தான் அதுக்கு தலைமை. ஒரு மிருகம் சொல்ற நகைச்சுவையைக் கேட்ட உடனே மத்த

விலங்குகள்லாம் சிரிக்கணும். அப்படி சிரிக்கல்லைன்னா நகைச்சுவை சொல்ற மிருகத்துக்கு ஒரு அடி கொடுக்கணுங்கறது போட்டியோட விதி.

குரங்கு முதலில் வந்து ஒரு ஜோக் சொன்னது. அதைக் கேட்டதும் மற்ற எல்லா விலங்கு களும் சிரிச்சுது. ஆனா ஆமை மட்டும் சிரிக்கலை. அதுனால குரங்குக்கு ஒரு அடி விழுந்துச்சு. அப்புறமா ஒட்டகம் வந்து ஒரு ஜோக் சொன்னது. அப்பவும்

ஆமை சிரிக்கலை. அதனால ஒட்டகத்துக்கும் அடி. மூணாவதா நகைச்சுவை சொல்ல கரடி வந்துது. கரடி வந்து நின்னவுடனேயே ஆமை சிரிக்க ஆரம்பிச்சுது. கரடி எதுவும் ஜோக் சொல்ல வேயில்லை. ஆனாலும் ஆமை விடாம சிரிச்

சிக்கிட்டிருந்திச்சு. ஆமை ஏன் சிரிக்குதுன்னு யாருக்கும் புரியல.

உடனே சிங்கம் ஆமையைக் கூப்பிட்டு, கரடி இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே. அதுக் குள்ள ஏன் சிரிச்சேன்னு கேட்டது.

அதுக்கு ஆமை, குரங்கு முதல்ல பேசிச்சு இல்லீங்களா அதை நினைச்சுச் சிரிச்சேங்க, அப்படின்னுச்சாம்.
தென்கச்சி கோ. சுவாமிநாதன் சொன்ன குட்டிக்கதை
More

ஒய்.ஜி. மகேந்திரனின் 'வெங்கடா3'
ரம்யாவுக்கு 'லாஸ்ய யுவ பாரதி' விருது
தேவை: பெர்க்கலி தமிழ்ப் பிரிவுத் துணைப் பேராசிரியர்
கேட்க ஒரு தென்றல்!
Share: 




© Copyright 2020 Tamilonline