Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அஞ்சலி | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
டெட்ராயிட் பாலாஜி கோவில் திருக்கல்யாணம்
அட்லாண்டாவில் 'குரு சமர்ப்பணம்'
மதுலிகா கிருஷ்ணன் நாட்டிய அரங்கேற்றம்
ரம்யா வெங்கடேஸ்வரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
மிடில்டௌன் முருகன் கோவில் திருவிழா
மீரா ரகுநாதன் நாட்டிய அரங்கேற்றம்
பாவனா & சுவாதி நடன அரங்கேற்றம்
திவ்யா ஆனந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
சூர்யா பரத நாட்டிய அரங்கேற்றம்
அக்ஷய் ஸ்ரீதர் இசை அரங்கேற்றம்
மிச்சிகனில் மூன்று அரங்கேற்றங்கள்
வரேண்யா ரஞ்சனி பரதநாட்டிய அரங்கேற்றம்
- மாலதி ஹரிஹரன்|அக்டோபர் 2011|
Share:
ஆகஸ்ட் 20, 2011 அன்று ஹுஸ்டனில் உள்ள கப்ளான் தியேட்டர், ஜூயிஷ் கம்யூனிடி சென்டரில் குரு பத்மினி சாரி அவர்களின் நிருத்யா ஸ்கூல் ஆஃப் டான்ஸ் பள்ளியின் மாணவி வரேண்யா ரஞ்சனி ஹரிஹரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மீனாக்ஷி கோயிலின் மாணிக்க பட்டர் அர்ச்சனை செய்து சலங்கையை குருவிடம் கொடுத்தார். கணேச துதி, திருப்புகழுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடையாறு லக்ஷ்மணின் ஆபோகி ராக ஜதிஸ்வரத்துக்கு ஏற்ப ரஞ்சனி ஆடியது அருமை. பாபநாசம் சிவனின் 'ஸ்வாமி நான் உந்தன் அடிமை' என்ற நாட்டைக்குறிஞ்சி வர்ணத்துக்கு அயராமல் ஆடிப் பாராட்டுப் பெற்றார் ரஞ்சனி.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாளாகத் தோன்றி, 'தூமணி மாடத்து', 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து', மாலே மணிவண்ணா' என்ற மூன்று பாசுரங்களுக்கும் அடுத்தடுத்து ஆடியது சிறப்பு. நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய, ரஞ்சனி, ஸ்ரீ ரஞ்சனி என 4 ராகங்களில் அமைந்த பாடலுக்கு சாந்த லலிதையாகவும், கர்ஜிக்கும் காளியாகவும் மாறிமாறி ரஞ்சனி அபிநயித்ததுதான். இறுதியில் வந்த பாலமுரளி கிருஷ்ணாவின் கதனகுதூகலத் தில்லானா நல்ல விறுவிறுப்பு.

பெங்களூருவிலிருந்து வந்திருந்த சங்கீதக் குழுவில், வாய்ப்பாட்டு பாடிய புஸ்தகம் ரமா, தீப்தி, புல்லாங்குழல் வாசித்த கே.எஸ். ஜய்ராம், மிருதங்க வாசித்த ஜனார்த்தன ராவ், 'ரிதம் பாட்' வாசித்த ஜி.எஸ். பிரத்யும்னா யாவரும் சிறப்பாகச் செய்தனர். வரேண்யா தன் சாதனைக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க, பெற்றோர் ராதிகா, ரமேஷ் யாவருக்கும் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

15 வயதே நிரம்பிய வரேண்யா 9 ஆண்டுகளுக்கும் மேலாக பரத நாட்டியம் கற்று வருகிறார். தவிர ஜாஸ், பாலே போன்ற நடனங்களையும் முறைப்படிக் கற்றவர். டுஷேன் அகாடமியில் 11ம் வகுப்பு பயில்கிறார். பியானோவில் தேர்ச்சி மிக்கவர். மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்.
மாலதி ஹரிஹரன்,
ஹூஸ்டன், டெக்ஸாஸ்
More

டெட்ராயிட் பாலாஜி கோவில் திருக்கல்யாணம்
அட்லாண்டாவில் 'குரு சமர்ப்பணம்'
மதுலிகா கிருஷ்ணன் நாட்டிய அரங்கேற்றம்
ரம்யா வெங்கடேஸ்வரன் கர்நாடக இசை அரங்கேற்றம்
மிடில்டௌன் முருகன் கோவில் திருவிழா
மீரா ரகுநாதன் நாட்டிய அரங்கேற்றம்
பாவனா & சுவாதி நடன அரங்கேற்றம்
திவ்யா ஆனந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம்
சூர்யா பரத நாட்டிய அரங்கேற்றம்
அக்ஷய் ஸ்ரீதர் இசை அரங்கேற்றம்
மிச்சிகனில் மூன்று அரங்கேற்றங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline