Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி | சிரிக்க சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்'
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தினவிழா
அரோராவில் வறியோர்க்கு உணவு
ஆல்ஃபரெட்டாவில் குழந்தைகள் தின விழா...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி
அட்லாண்டா தமிழ்ப் பள்ளியில் தீபாவளி விழா
பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை'
'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா'
நவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி
'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா
மாயா ராமச்சந்திரனின் 'சிவனே மாயா'
ஆன்செம்பிள் ஆஃப் ராகாஸ் கலைப் பள்ளியின் 'அபிநவ கானாம்ருதம்'
- |டிசம்பர் 2010|
Share:
அக்டோபர் 29, 2010 அன்று ஷாம்பர்கிலுள்ள (இல்லினாய்ஸ்) Ensemble of Ragas School of Performing Arts 'அபிநவ கானாம்ருதம்' என்ற தனது முதல் தயாரிப்பை ஷாம்பர்க் ப்ரைரீ ஆர்ட்ஸ் சென்டரில் வழங்கியது. பன்னாட்டு மணமும் ஆன்ம ஒருமைப்பாடும் விரவிய, செவ்வியல்-சமகால இசை-நடனத்தை வழங்குவது இந்நிகழ்ச்சியின் நோக்கம். வேறுபட்ட பின்புலங்கள் கொண்ட கருவியிசையோடு, பரதநாட்டியமும் கதக் நடனமும் இதில் இடம்பெற்றன.

சரஸ்வதி ரங்கநாதன் (வீணை), கார்லோ பசில் (ஃப்ளெமங்கோ கிடார்), மார்டின் மெட்ஸ்கர் (ஜாஸ் கிடார்), ஜோ மார்ட்டினஸ் (லத்தீன் டிரம்ஸ்), தனஞ்சய் குன்டே (தப்லா), கணபதி ரங்கநாதன் (மிருதங்கம்), ரவி ஐயர் (கடம்) ஆகியோர் வாத்தியங்கள் வாசித்தனர். நடனம் ஆடியோர் விஜயலக்ஷ்மியும் காத்யாயினியும்.

சிறப்புப் பிரார்த்தனைப் பாடலை சாந்தா ரங்கநாதன் தலைமையில் பள்ளியின் மாணவர்கள் பாடினர். 'ஆவாஹனா', 'கல்யாணி' முதலிய பாரம்பரிய ராகத்தில் அமைந்த இசைக் கோவையும் அவற்றுக்கான நடனம் எழிலாக இயைந்திருந்தன. 'ரைம்ஸ் இண்டியானா' அவையோரை எழுந்து ஆடச் செய்தது. ஜாஸ், ஃப்ளெமங்கோ, இந்திய இசை ஆகியவற்றின் சுவாரசியமான கதம்பமாக அமைந்த 'பஹுதாரி' நிகழ்ச்சியின் மகுடமாக அமைந்தது. இறுதி உருப்படியான 'ரெவரீ' அமைதியும் ஆரவாரமும் ஒருசேரக் கொண்ட பன்முக இசையாகப் பெருகியது. சரஸ்வதி ரங்கநாதன் வீணையில் வாசித்த வேத மந்திரத்துடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.
ஷாம்பர்க் கிராமத்தின் மூத்த அறங்காவலர் திரு. ஜார்ஜ் டன்ஹம் நிகழ்ச்சியி சிறப்பு விருந்தினராக வந்திருந்து திருவெம்பாவை குறுந்தகடை வெளியிட்டார். டாக்டர் சாரதா சொன்ட்டி (நிறுவனர்-இயக்குனர், SAPNA), சாயி சல்லபள்ளி (அமரர் டாக்டர் சிட்டிபாபுவின் மகன்) ஆகியோரும் பங்கேற்று பாராட்டிப் பேசினர்.

செய்திக் குறிப்பிலிருந்து
More

சௌம்யா ராமநாதனின் 'சமர்ப்பணம்'
சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தினவிழா
அரோராவில் வறியோர்க்கு உணவு
ஆல்ஃபரெட்டாவில் குழந்தைகள் தின விழா...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி
அட்லாண்டா தமிழ்ப் பள்ளியில் தீபாவளி விழா
பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய க்ரியாவின் 'தனிமை'
'பெப்பெரப்பே' வழங்கிய 'மாங்கல்யம் வம்பு தானேனா'
நவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி
'ட்ரினிடி' இசைப்பள்ளி ஆண்டு விழா
மாயா ராமச்சந்திரனின் 'சிவனே மாயா'
Share: 




© Copyright 2020 Tamilonline