Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
மாதுளம்பழ சாதம்
ஆவி அடை
ஆவி வந்த அடை!
- இந்திரா காசிநாதன்|ஜூலை 2010|
Share:
ஆவி மெதுவடை

தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 1 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 4
இஞ்சி - 4 துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
உளுத்தம் பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி உப்பு, மிளகாய் வற்றல், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். ஒரு தட்டில் 1 தேக்கரண்டி எண்ணெய் தடவி அரைத்த விழுதை மெலிதாகப் பரப்பவும். குக்கரில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு, அதன்மேல் விழுதைப் பரப்பிய தட்டை வைத்து குக்கரை மூடவும். சுமார் 15 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். பிறகு குக்கரைத் திறந்து வெந்த விழுதை எடுத்து நன்றாகப் பிசைந்து கடுகு தாளித்து, பெருங்காயம், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து (தேவையானால் சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கலாம்) சிறு உருண்டைகளாக உருட்டி வடைபோல் நடுவில் ஓட்டை போட்டு மீண்டும் குக்கரில் வேக விடவும். மிகவும் ருசியான, சத்தான ஆபத்தில்லாத ஆவி வடை தயார்.
இந்திரா காசிநாதன்
More

மாதுளம்பழ சாதம்
ஆவி அடை
Share: 




© Copyright 2020 Tamilonline