Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | எனக்கு பிடிச்சது | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கூட்டங்கள்
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
சன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் குழந்தைகள் தினவிழா, திருக்குறள் போட்டி
- பூங்கோதை கோவிந்தராஜ்|பிப்ரவரி 2010|
Share:

நவம்பர் 14, 2009 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம், குழந்தைகள் தின விழா மற்றும் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. தலைவர் திருமதி. வித்யா கல்யாணராமன் வரவேற்புரை வழங்கினார்.

மழலைகளின் மாறுவேடக் காட்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 2 முதல் 5 வயதிலான சிறார்கள் இதில் பங்கு கொண்டு சிறப்பித்தார்கள். மரங்களைக் காப்போம் என்ற வேண்டுகோளுடன் மரமாக வந்த வைசாலி, குடுகுடுப்பைக்காரர், நவநாகரிகக் குறத்தி, திருஞான சம்பந்தர் போன்ற வேடங்களில் மழலைகள் மேடையை அலங்கரித்தனர். குறிப்பாக 'பட்டு மாமி கிட்டு மாமா'வாக வந்த அனன்யாவும் ரிஷி கிருஷ்ணனும் கைதட்டலை அள்ளினர்.

திருக்குறள் ஒப்பித்தல் போட்டிக்கான விதிமுறைகளைத் திருமதி மலர் செந்தில் விளக்கினார். திருமதி பூங்கோதை கோவிந்தராஜ் வரவேற்றுப் பேசினார். திருமதி உமா நெல்லையப்பன், திரு நித்தி பாலன் மற்றும் திரு கதிரவன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடுவர்களாகப் பணி புரிந்தனர். இந்தப் போட்டியில் 5 முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் பங்கு பெற்றனர்.
தொடர்ந்து, 'NETS திறமைத் தேடல்' நிகழ்ச்சி சிறுவன் அதுல்வாசனின் 'அம்மாவும் நீயே; அப்பாவும் நீயே' பாடலுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் வாய்ப்பாட்டு, பரதம், குச்சுப்புடி, வாத்ய இசை, மேற்கத்திய நடனம் எனப் பல திறமைகளையும் சிறுவர்கள் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக மதுரையின் வட்டாரப் பேச்சை அழகு குறையாமல் வழங்கிய அமிர்தா மற்றும் கீர்த்தனா கிருஷ்ண குமார் பலத்த கைதட்டல் பெற்றார்கள். 'செந்தூரப் பூவே' பாடலைப் பாடிய சப்னா அனைவரையும் தேனிசைக் குரலால் 'ஒன்ஸ் மோர்' கேட்க வைத்தார். சித்தாந்த் தன்ராஜின் மேஜிக் ஷோ சிறுவர்களை வியக்க வைத்தது.

இறுதியாக, திரு ராஜ் வேல் முருகனின் நன்றியுரை, திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு, நிகழ்ச்சியில் பங்கு பெற்றோருக்கு நினைவுப் பரிசளிப்பு ஆகியவை இடம்பெற்றன.

பூங்கோதை கோவிந்தராஜ்,
பாஸ்டன், மசாசூட்ஸ்
More

மலிபு கோவில் தியாகராஜ ஆராதனை
சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
சிகாகோவில் 'நாட்யா டான்ஸ்' நிகழ்ச்சி
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்
'ஸ்வரம்' வழங்கிய 'அன்றும் இன்றும்'
அட்லாண்டா பெருநகரத் தமிழ் சங்கம் பொங்கல் விழா
மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
அரோராவில் வீடற்றோருக்கு உணவு வழங்கல்
கர்நாடிக் சேம்பர் கான்செர்ட்ஸ் வழங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள்
அட்லாண்டா தமிழ் சபையின் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் கூட்டங்கள்
ஷோபனா கோபாலகிருஷ்ணன் நாட்டிய நிகழ்ச்சி
சன்னிவேலில் ஆன்மீகச் சொற்பொழிவு
Share: 




© Copyright 2020 Tamilonline