Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | நூல் அறிமுகம் | அஞ்சலி | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
அஞ்சலி
கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்!
கவிஞர் பாலா
- அரவிந்த்|அக்டோபர் 2009|
Share:
Click Here Enlargeவானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான கவிஞர் பாலா என்கிற முனைவர் பாலசந்திரன் (63) செப்டம்பர் 22, 2009 அன்று சென்னையில் காலமானார்.

இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், இலக்கிய ஒப்பாய்வில் முனைவர் பட்டமும் பெற்றவரான பாலசந்திரன் 70களில் பிரபலமாக இருந்த வானம்பாடிக் குழுவில் இணைந்து பல நல்ல கவிதை நூல்களைப் படைத்தார். அவருடைய 'புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை' என்ற நூல் மிக முக்கியமானது. இவரது கவிதை மற்றும் கட்டுரை நூல்கள் இளைஞர்கள் பலரைப் புதுக்கவிதையின்பால் ஈர்த்தது. சாகித்திய அகாதெமியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ் சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு அமைப்பாளராகவும் பணியாற்றினார்.

ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் வல்லவரான பாலா, கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரை என தமிழிலும், ஆங்கிலத்திலுமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். 'கவிதை பக்கம்', 'சர்ரியலிஸம்', 'பாரதியும் கீட்சும்', 'வித்யாபதியின் காதல் கவிதைகள்', 'இன்னொரு மனிதர்கள்', 'நினைவில் தப்பிய முகம்' போன்ற இவரது படைப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. கவிஞர்கள் மீரா, மு.மேத்தா, ராஜம் கிருஷ்ணன் ஆகியோரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவருக்குத் தென்றல் அஞ்சலி செலுத்துகிறது.
அரவிந்த்
More

கண்ணீர் விடாதவருக்காகக் கண்ணீர்!
Share: 




© Copyright 2020 Tamilonline