Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பைனாப்பிள் ரசம்
இஞ்சி ரசம்
சீரக ரசம்
ஸுக்கினி மசியல்
- பிரேமா நாராயணன்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeதேவையான பொருட்கள்
பெரிய ஸுக்கினி - 6 துண்டுகள்
பச்சைமிளகாய் - 6
இஞ்சித் துருவல் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - சிறிதளவு

செய்முறை
ஸுக்கினியைக் கழுவித் தோல்நீக்கித் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனை பிரஷர் குக்கரில் வேகவிட்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயப்பொடி, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் போட்டு வதக்கவும். கடுகு வெடித்து உளுத்தம்பருப்பு சிவந்ததும் மசித்த ஸுக்கினியை அதில் போடவும். உப்புப் போட்டு மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கிளறியவுடன் நீர்த்தாற்போல் இருந்தால் 1 தேக்கரண்டி அரிசிமாவைத் தண்ணீரில் கரைத்து விடவும். கொதித்தவுடன் நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி தூவி இறக்கவும். எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறிப் பரிமாறலாம். சாம்பார் சாதம், காரக் குழம்புக்குத் தொட்டுக்கொள்ள மிக ருசியாக இருக்கும்.
பிரேமா நாராயணன், ஷோம்பர்க், இல்லினாய்ஸ்
More

பைனாப்பிள் ரசம்
இஞ்சி ரசம்
சீரக ரசம்
Share: 




© Copyright 2020 Tamilonline