Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- |ஜூன் 2009|
Share:
1. ஒரு குளத்தில் சில தாமரை மலர்கள் இருந்தன. அதை நோக்கிச் சில வண்டுகள் வந்தன. 1 பூவிற்கு 1 வண்டு என அமர்ந்த போது 6 வண்டுகள் மலர் கிடைக்காமல் மீதம் இருந்தன. அவையே 1 பூவிற்கு 2 வண்டுகளாய் அமர்ந்த போது 6 மலர்கள் மீதம் இருந்தன என்றால், வண்டுகள் எத்தனை, மலர்கள் எத்தனை?

2. ராமு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சில பதக்கங்களை வாங்கி வந்தான். அவன் தந்தை அதற்குப் பரிசாக முதல் பதக்கத்திற்கு 1 டாலரும், 2 வது பதக்கத்திற்கு 2 டாலரும், 3 வது பதக்கத்திற்கு 4 டாலரும் என தொடர்ந்து இரு மடங்குகளாகக் கொடுத்தார். ராமு தன்னுடைய பதக்கங்களுக்காக மொத்தம் 4095/- டாலர்களைத் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டான் என்றால் அவன் வாங்கிய பதக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

3. ஆலமரத்தில் தங்கியிருக்கும் பறவை களைப் போல அரசமரத்தில் தங்கியிருக்கும் பறவைகளின் எண்ணிக்கை 8 மடங்கு. இரண்டு மரப் பறவைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வரும் தொகையும், பெருக்கினால் வரும் தொகையும் ஒன்றுக்கொன்று இட, வலமாக மாறி அமைந்திருக்கின்றன என்றால் அப்பறவைகளின் எண்ணிக்கை என்ன?

4. ஒரு இரும்புப் பெட்டகத்துள் எட்டு தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றில் சில முக்கால் கட்டிகள், சில அரைக் கட்டிகள், சில கால் கட்டிகள். பொற்கொல்லனை வரவழைத்து அவற்றை வெட்டித் தங்களுக்குச் சமமாகப் பிரித்துக் கொள்ள மூன்று சகோதரர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களது ஆசிரியர் அவற்றை வெட்டாமலேயே சமமாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று கூறி, அவ்வாறே செய்தும் காட்டினார். அவர் பிரித்தது எப்படி, முக்கால், அரை, கால் கட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

5. 1, 4, 27, 256........ வரிசையில் அடுத்து வரக் கூடிய எண், எது ஏன்?
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline