Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
அஞ்சலி
கவிஞர் சி. மணி
- |மே 2009|
Share:
Click Here Enlargeதமிழில் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரும் அமெரிக்காவின் விளக்கு இலக்கியப் பரிசு, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது உட்பட பல்வேறு கௌரவங்களைப் பெற்றவருமான கவிஞர் சி. மணி (72) ஏப்ரல் 7, 2009 அன்று சேலத்தில் காலமானார். சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' இதழ்மூலம் உருவாகி, தனக்கென புதுக்கவிதை உலகில் ஒரு தனி இடத்தைப் பெற்ற மணி, 1936ஆம் ஆண்டு பிறந்தவர். இயற்பெயர் பழனிசாமி. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ., பட்டம் பெற்ற இவர், கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இளம்பருவம் முதலே கவிதை ஆர்வம் காரணமாக எழுத்து, பிரக்ஞை, கசடதபற போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்த மணி, கவிதை மீது தனக்கிருந்த தனிப்பட்ட ஆர்வம் காரணமாக ‘நடை' என்ற பத்திரிகையையும் நடத்தினார். ‘வரும் போகும்', ‘ஒளிச் சேர்க்கை', ‘சாரல்', ‘இதுவரை' போன்ற கவிதை நூல்களையும், ‘யாப்பும் கவிதையும்' என்ற இலக்கண விமர்சன நூலையும் எழுதியிருக்கிறார். டி.எஸ். எலியட்டின் ‘பாழ்நிலம்' நூலைத் தமிழாக்கம் செய்ததுடன், அதன் பாதிப்பில் நரகம் என்னும் நீள்கவிதையையும் படைத்திருக்கிறார். இவைதவிர தமிழாக்கமாகவும், கட்டுரையாகவும் பல நூல்களைப் படைத்திருக்கிறார். பௌத்தம், தாவோ பற்றிய நூல்களை இவர் மொழியாக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதுமை காரணமாக படைப்புலகிலிருந்து சற்றே ஒதுங்கி இருந்த மணி, மாரடைப்பால் சேலத்தில் காலமானார்.

தமிழ்க் கவிதை உலகின் மிக முக்கியமான கவிஞருக்கு தென்றல் அஞ்சலி செலுத்துகிறது.

Share: 




© Copyright 2020 Tamilonline