Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சிரிக்க சிரிக்க | நேர்காணல்
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
கேரட் சாதம்
கொத்தமல்லி படோலி
முள்ளங்கி காரபுட்டு
காஷ்மீர் புலாவ்
பட்டாணி சாதம்
- வசந்தா வீரராகவன்|ஜூன் 2001|
Share:
தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்
உரித்த பட்டாணி - 3/4 கப்
பெரிய வெங்காயம் - 3
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைப்பழம் - 1
உப்பு - ருசிக்கேற்ப
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 1/2 மேஜைக்கரண்டி

தாளிப்பதற்கு தேவையானவை :

கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் மருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய முந்திரிப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு

அரைப்பதற்கு தேவையானவை:

தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 7
இஞ்சி -1/4 அங்குலத்துண்டு
சிறிய வெங்காயம் - 6
பூண்டு - 4
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
பட்டை - 1 சிறு துண்டு
செய்முறை

அரிசியை உதிரியாக வேகவைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஆறவிடவும். பட்டாணியைத் தனியாக வேகவைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம் ஆகியவற்றை நெய்யில் வதக்கி தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், இஞ்சி உடன் சேர்த்து அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் வேகவைத்த பட்டாணி, அரைத்த மசாலா விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். சூடு ஆறிய சாதத்தை அத்துடன் சேர்த்துக் கிளறவும். அடுப்பில் தீயை பெரிதாக்கி சாதம் சூடாகும் வரை கிளறிக் கொண்டு இருக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கியதும் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித் தழைத் தூவிப் பரிமாறவும்.

வசந்தா வீரராகவன்
More

கேரட் சாதம்
கொத்தமல்லி படோலி
முள்ளங்கி காரபுட்டு
காஷ்மீர் புலாவ்
Share: 




© Copyright 2020 Tamilonline