Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
நவராத்திரி ஸ்பெஷல்
காராமணி இனிப்பு சுண்டல்
சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை)
அரிசி அப்பம்
பாசிப்பருப்பு பாயசம்
பால் பாயசம்
சர்க்கரைப் பொங்கல்
கடலை பருப்புப் போளி
புட்டு
- சரஸ்வதி தியாகராஜன்|அக்டோபர் 2002|
Share:
(நவராத்திரி வெள்ளிக்கிழமை இதைச் செய்வது வழக்கம்)

தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - 1 கப்
து. பருப்பு - 1/8 கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
நெய் - 2 ஸ்பூன்
ஏலக்காய்
(பொடி செய்தது) - 1 ஸ்பூன்
வறுத்த முந்திரி - 15 (சிறிதாக உடைத்துக் கொள்ளவும்)
உப்பு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
செய்முறை

பச்சரிசி மாவை எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக (அதிக நேரம் வேண்டாம் இளம் சிவப்பாக வரும் வரை) வறுத்து ஆறவைத்துக் கொள்ளவும்

தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்க்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு சிறிது சிறிதாக வறுத்த அரிசி மாவைச் சேர்த்துக் கிளறவும்.

துவரம் பருப்பை வேகவைக்கவும். கையில் பிடித்தால் ஒட்டாமல் பிடிக்க வரும் பதமாக இருக்கவேண்டும்.

இட்லி தட்டை எடுத்து அதன் மீது சிறிய துணியை விரித்து, இந்த மாவுக் கலவையை வைத்து பத்து நிமிடங்கள் நீராவியில் வேக விடவும் (இட்லி செய்வது போலத் தான்).

பின்னர் இறக்கி, ஒரு தட்டில் கொட்டவும்.

கடாயில் நெய்யைச் சூடாக்கி முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

1/2 கப் தண்ணீரை சூடாக்கி பொடிசெய்த வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லப்பாகு ஒரு துளி எடுத்து குளிர்ந்த தண்ணீரில் விட்டால் உடனடியாக கெட்டியாகும் பதத்திற்கு இருக்கவேண்டும்.

தேங்காய் துருவலைச் சேர்த்துக் கிளரவும். பின்னர் வேகவைத்த அரிசி மாவு மற்றும் துவரம் பருப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.

வறுத்த முந்திரி, ஏலக்காய் பொடி மற்றும் நெய்யைக் கொட்டி நன்றாக கிளறவும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

நவராத்திரி ஸ்பெஷல்
காராமணி இனிப்பு சுண்டல்
சிமிலி (எள்ளுப் பொடி உருண்டை)
அரிசி அப்பம்
பாசிப்பருப்பு பாயசம்
பால் பாயசம்
சர்க்கரைப் பொங்கல்
கடலை பருப்புப் போளி
Share: 




© Copyright 2020 Tamilonline