Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
கவிதைப்பந்தல்
அர்ச்சனை இலைகள்
தனிமரம்
- ராஜா|டிசம்பர் 2002|
Share:
கவி பாடும் 'தனிமையில் இனிமை' இல்லையிது
புவி யாளும் உச்சத்தின் ஒருமையுமில்லையிது
கரையில் தோணி தரையில் ஏணி.

இருளின் உருவுதெரியாமத் தனிமை.
தெருவில் திரிவோரின் தனிமை.
முதுமையின் பிடிப்பில்லாத் தனிமை.
தோல்வியின் துயர் தோய்ந்த தனிமை.

ஏனென்று தெரியாமல் பற்றிழந்த தனிமை.
எப்போதென்று உணராமல் உறவிழந்த தனிமை.
நடைபேச்சினூடே மெளனம் பார்த்துணரும் தனிமை.
எண்ணங்களின் நடுவில் மட்டும் வாழும் தனிமை
மரிக்குமுன் ஒருமுறை பறக்க சிறகு விரிக்கும் தனிமை.

ராஜா

******
முடியாது

தென்றலின் இதத்தில் சிலிர்க்கலாம்.
காற்றதனைக் கையில் பிடிக்கலாகுமோ?
காரிகையர் கை பிடிக்கலாம்.
கற்றாலும் அவர் கனவுகளை படிக்கலாகுமோ?

சந்தனத்தை மேலே பூசலாம்.
அதன் வாசம் போகும் வழி கட்ட இயலுமா?
சந்தனமேனியில் தூங்கலாம்.
அவர் மனப் போக்கை அறியவொட்டுமா?

மகிழதன் சுகந்த முகரலாம்.
மாற்றி இன்னொரு மணந்தர முடியுமா?
மகிழ்ந்து சுகம் பெறலாம்.
மங்கை மனம் மகிழ வைக்க முடியுமா?

தூவும் மழைநீரில் துளையலாம்.
தேவைபோல் அதைப் பெய்யெனக்கூடுமா?
தேவியவள் என் துணையென வாழலாம்.
என்னவள் என்றுடமையாக்கத்தான் முடியுமா?

ராஜா
More

அர்ச்சனை இலைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline