Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
சொற்கள் | பாட்டு |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - பாட்டு
என் தெய்வம்
- அழ. வள்ளியப்பா|மே 2003|
Share:
அம்மா, அம்மா, வருவாயே,
அன்பாய் முத்தம் தருவாயே.
அம்மா உன்னைக் கண்டாலே,
அழுகை ஓடிப் போய்விடுமே

பத்து மாதம் சுமந்தாயே
பாரில் என்னைப் பெற்றாயே.
பத்தி யங்கள் காத்தாயே.
பாடு பட்டு வளர்த்தாயே.

அழகு மிக்க சந்திரனை
ஆகா யத்தில் காண்பித்தே
பழமும், பாலும் ஊட்டிடுவாய்;
பாட்டும் கதையும் சொல்லிடுவாய்.

தமிழைக் கற்றுத் தந்திடுவாய்.
'தத்துப் பித்'தெனப் பேசிடினும்
'அமுதம், அமுதம்' என்றிடுவாய்.
அணைத்து முத்தம் தந்திடுவாய்.
எனக்குச் சிறுநோய் வந்தாலும்
ஏனோ மிகவும் வருந்துகிறாய்?
உணவும் இன்றி உறங்காமல்,
உயிர்போல் என்னைக் காக்கின்றாய்.

உன்னைப் போலே வளர்த்திடுவோர்,
உலகில் உண்டோ வேறொருவர்?
என்னைக் காக்கும் அம்மாவே,
எனக்குத் தெய்வம் நீதானே.

அழ. வள்ளியப்பா
Share: 




© Copyright 2020 Tamilonline