Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பலவகைச் சாதங்கள்
மசாலா சாம்பார் சாதம்
கத்தரிக்காய் சாதம்
பன்னீர் சாதம்
இஞ்சி சாதம்
மிளகு சீரக சாதம்
கடுகுப்பொடி சாதம்
ஐங்காயப்பொடி சாதம்
கதிரொளிச் சாறு - வாசகர் கைவண்ணம்
சாம்பார் சாதம்
- சரஸ்வதி தியாகராஜன்|ஜூன் 2004|
Share:
தேவையான பொருட்கள்

வேகவைத்த துவரம் பருப்பு - 2 கிண்ணம்
வெந்த சாதம் -2 கிண்ணம்
ஆலிவ் எண்ணெய் -2 மேசைக்கரண்டி
கொத்துமல்லி -1 கட்டு
நெய் -1 தேக்கரண்டி
திடீர் புளி (instant tamarind) -1 1/2 தேக்கரண்டி
தக்காளி, வெங்காயம் நறுக்கியது -1 கிண்ணம்
பீன்ஸ், காரட் 1" நீளத்திற்கு நறுக்கியது-1/2 கிண்ணம்
பட்டாணி -1/4 கிண்ணம்
உப்பு -தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
சாம்பார் பொடி -2 1/2 தேக்கரண்டி
மிளகு -1/2 தேக்கரண்டி
சீரகம் -1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் வற்றல் -3
உளுத்தம்பருப்பு -1 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை -2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு -2 மேசைக்கரண்டி
செய்முறை

மிளகு, மிளகாய் வற்றல், சீரகம், உளுத்தம்பருப்பு, கொத்துமல்லி விதை (தனியா), கடலைப்பருப்பு இவற்றை கொஞ்சம் எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் கரகரப்பாகத் தண்ணீர் விடாமல் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

குக்கரில் திடீர் புளியைப் போட்டு தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

இதில் எல்லாக் காய்கறிளுடன் உப்பு, சாம்பார் பொடி போட்டுக் கலந்து விடவும். கொத்துமல்லியின் தண்டுகளை மட்டும் பொடியாக நறுக்கி இதில் போடவும். இத்துடன் ஆலிவ் எண்ணெய் விட்டுக் கலந்து அடுப்பில் வைத்து மூடி, குக்கர் வெயிட் (Weight) போட்டு 4 சீழ்க்கை (whistle) வந்ததும் இறக்கி, தானாக அழுத்தம் அடங்கிய பின்னர் திறக்கவும்.

மறுபடி தளதள என்று கொதிக்கவிடவும். இப்போது பொடி செய்ததை இதனுடன் கலந்து நன்றாக ஒரு நிமிடம் கொதித்த பின்னர் வெந்த பருப்பை மசித்து இதில் போடவும். கொதிக்க ஆரம்பித்த உடன் இரண்டு கப் வெந்த சாதத்தை இதனுடன் போட்டுக் கலந்து நெய் சேர்த்து, கொத்துமல்லித் தழை நறுக்கிப் போட்டுக் கலந்து, அடுப்பை அணைத்து விட்டு, குக்கர் மூடியால் மூடி, வெயிட்டைப் போட்டு விடவும்.

இதை சாப்பிடுவதற்குச் சில மணிநேரம் முன்னாலேயே செய்து வைத்து, பின்னர் சாப்பிட்டால் அதிகச் சுவையுடன் இருக்கும்.

சரஸ்வதி தியாகராஜன்
More

பலவகைச் சாதங்கள்
மசாலா சாம்பார் சாதம்
கத்தரிக்காய் சாதம்
பன்னீர் சாதம்
இஞ்சி சாதம்
மிளகு சீரக சாதம்
கடுகுப்பொடி சாதம்
ஐங்காயப்பொடி சாதம்
கதிரொளிச் சாறு - வாசகர் கைவண்ணம்
Share: 




© Copyright 2020 Tamilonline