Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
உப்பில்லாத சமையல்
வெல்ல அவல்
வெல்லத் தோசை
வெல்லக்கூட்டு
தயிர் சாதம்
சொஜ்ஜி ரொட்டி
பருப்புத் தீர்த்தம்
வாசகர் கைவண்ணம்
- ஜெயலட்சுமி சேஷாத்திரி|நவம்பர் 2004|
Share:
ஜவ்வரிசி போண்டா

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி (சிறியது) - 1 கிண்ணம்
ரவை - 1 கிண்ணம்
புளித்த தயிர் - 1 1/2 கிண்ணம்
மிளகாய்ப்பொடி - தேவைக்கேற்ப
வெங்காயம் (அரிந்தது) - 1/2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயத் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை

ஜவ்வரிசியுடன் ரவை மற்றும் தயிர் கலந்து 4 மணி நேரம் ஊற விடவும். ஜவ்வரிசி நன்றாக ஊற வேண்டும். இல்லாவிட்டால் மிருதுவாக வராது.

ஊறிய ஜவ்வரிசியுடன் காரப்பவுடர், உப்பு, வெங்காயம், பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் வேண்டாம்.

சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ¤டன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்

உலர்ந்த தக்காளி வில்லைகள் (slices) - 1 பொட்டலம்
தண்ணீர் - 1 கிண்ணம்
எண்ணெய் - 1/2 கிண்ணம்
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை

உலர்ந்த தக்காளி வில்லைகளுடன் ஒரு கிண்ணம் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 நிமிடம் நுண்ணலை அவியனில் (மைக்ரொவேவ் அவன்) வைக்கவும். ஒரு நிமிடத்துக் கொருமுறை மேலும் கீழுமாக ஸ்பூனால் கிளறிவிடவும்.

மென்மையாக இல்லாவிடில் தண்ணீர் தெளித்து மேலும் 3 நிமிடம் வைக்கவும்.

நிறையத் தண்ணீர் விட வேண்டாம். தக்காளி விழுதாக இறக்க வேண்டும். தக்காளி நன்றாக மசிந்ததும் பீங்கான் கிண்ணத்தில் (bowl) நடுவில் குழி இருக்குமாறு நாலாபுறமும் சமமாகப் பரப்பவும்.

நடுவில் உள்ள குழிவான இடத்தில் பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், வெந்தயத் தூள், மஞ்சள் தூள் எல்லாவற்றையும் போடவும். எண்ணெயைக் காயவைத்து, கடுகைப் போட்டு வெடித்ததும், சூடாகக் குழியில் உள்ளவற்றின் மேல் ஊற்றி, தட்டால் மூடவும்.

15 நிமிடம் கழித்துத் திறந்து, விழுதை நன்றாகக் கரண்டியால் கலக்கவும். பின் உலர்ந்த பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

சாதத்தில் கலந்து தக்காளி சாதம் செய்யலாம். சப்பாத்தி, இட்லி, தோசை முதலியவற்றிற்குத் தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.

ஜெயலட்சுமி சேஷாத்திரி
More

உப்பில்லாத சமையல்
வெல்ல அவல்
வெல்லத் தோசை
வெல்லக்கூட்டு
தயிர் சாதம்
சொஜ்ஜி ரொட்டி
பருப்புத் தீர்த்தம்
Share: 




© Copyright 2020 Tamilonline