Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
அவசர சமையல்
கீரை மசியல்
மசாலாக் கீரை
திடீர் குழம்பு
திடீர் ரசம்
வாசகர் கைவண்ணம் - பாதாம் கேக்
பாசிப்பருப்பு மசாலா தால் (Spicy Moong dhal)
- சரஸ்வதி தியாகராஜன்|பிப்ரவரி 2005|
Share:
தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 கிண்ணம்
தக்காளி (பொடியாக நறுக்கியது) - 1/4 கிண்ணம்
உரித்த பூண்டு முழுப் பல் - 1
கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1 தேக்கரண்டி
பெரும்சீரகம் - 1/4 தேக்கரண்டி
லவங்கப் பட்டை - 1 சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

பிரஷர் பானில் (Pressure Pan) ஆலிவ் எண்ணெய் விட்டு, காய்ந்த பின்பு பெரும் சீரகம், லவங்கப் பட்டை போட்டு, சற்று வறுக்கவும். பின்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்துச் சிறிது வதக்கவும்.

பின்னர் கரம் மசாலாத் தூள், சிவப்பு மிளகாய்ப் பொடி, தேவையான உப்பு போடவும்.
பாசிப்பருப்பைக் கழுவி இதனுடன் சேர்த்து, 3 கிண்ணம் தண்ணீர் விட்டு, கரண்டியால் நன்றாகக் கலந்து விட்டு பிரஷர் பானை மூடவும். ஆவி வந்த பின்பு வெயிட்டைப் (weight) போட்டு ஐந்து முறை சத்தம் வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

பிரஷர் தானாக அடங்கிய பின்பு, திறந்து கரண்டியால் சற்று மசித்துக் கிளறி, பச்சைகொத்துமல்லி இலைகளைத் தூவவும்.

இதைச் சப்பாத்தி அல்லது பாசுமதி சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

சரி இதெல்லாம் வேண்டாம். நமது தென்னிந்திய வழக்கப்படி சாதம், குழம்பு, ரசம், செய்ய வேண்டுமானால் அதையும் எளிய முறையில் சீக்கிரமாக செய்ய முடியும். துவரம் பருப்பை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குச் சேர்த்து வேகவைத்து குளிர்பதனப் பெட்டியில் (Refrigerator) வைத்துக் கொள்ளலாம்.

திடீர் குழம்பு மற்றும் ரசம் ஒரே முறையில் கீழே கண்டவாறு வைத்துவிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்
More

அவசர சமையல்
கீரை மசியல்
மசாலாக் கீரை
திடீர் குழம்பு
திடீர் ரசம்
வாசகர் கைவண்ணம் - பாதாம் கேக்
Share: 




© Copyright 2020 Tamilonline