Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சான் அன்டோனியோ: தீபாவளிக் கொண்டாட்டம்
ரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி
ஃபார்மிங்டன் ஹில்ஸ்: விஸ்வரூப ஸ்ரீ பக்த ஹனுமான்
பாரதி தமிழ்ச் சங்கம்: 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம்
அரங்கேற்றம்: அனிகா காஞ்சி
ஹார்வர்டு தமிழ் இருக்கை: 'இதய கீதம்'
ஸ்ரீ லலித கான வித்யாலயா: வெள்ளி விழா
செவிலியர் தலைமைத்துவ மாநாடு
அரங்கேற்றம்: அதிதி கிருஷ்ணன்
அரங்கேற்றம்: ஷ்ரத்தா ராம்நாத்
அரங்கேற்றம்: ஸ்ருதி ஸ்ரீதர்
கச்சேரி: சுவேதா சுப்பையா
ஆனந்தநாராயண பாகவதர் நாமசங்கீர்த்தன யாத்திரை
இரட்டை அரங்கேற்றம்: மஹதி ஆத்ரேயா, ஹரிஹரன் சண்முகம்
அரங்கேற்றம்: நேஹா சிந்து சிவராமன்
- அனு சுரேஷ், புஷ்பராஜா ராஜேஸ்வரன்|நவம்பர் 2017|
Share:
செப்டம்பர் 2, 2017 அன்று செல்வி. நேஹா சிந்து சிவராமனின் கர்நாடக சங்கீத இசை அரங்கேற்றம் கலிஃபோர்னியா வால்நட் க்ரீக்கில் உள்ள லெஷெர் மையத்தின் ஹாஃப்மன் அரங்கில் நடைபெற்றது.

சிந்து இசை நிகழ்ச்சியைக் கானடா வர்ணத்தில் ஆரம்பித்து, அதன் கண்டஜாதி அடதாள இரு காலத்தையும் மேலான கட்டுப்பாட்டுடன் பாடியது மிக அழகு. "வாரண முகவாய் துணை வருவாய்" என்ற விநாயகர் பாடலுக்கு மெருகூட்டும் வகையில் கற்பனா ஸ்வரங்கள் பாடியது குரு ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் அவர்களின் வித்துவத்துக்குச் சான்று பகர்ந்தது. தொடர்ந்து "தாயே யசோதா", பூர்விகல்யாணி ராகத்தில் "மருகுலாவிய" என்னும் திருப்புகழ், தியாகராஜ சுவாமிகளின் "நகுமோமு", பாபநாசம் சிவனின் "தயவில்லையா தயாளோ" என்ற கரகரப்ரியா ராகப் பாடல் ஆகியவற்றைச் சிந்து கையாண்டது மெச்சும்படியாக இருந்தது.

பாபநாசம் சிவனின் "காணக் கண்கோடி வேண்டும்" என்னும் காம்போஜி ராகப் பாடலில் "மாணிக்கம் வைரம் முதல் நவரத்தினாபரணமும்" என்ற இடத்தில் நிரவல் பிரமிக்க வைத்தது. அடுத்ததாக ராகம், தானம், பல்லவியை ராகமாலிகையில் சிந்து மிக நிதானத்துடன் மிஸ்ரஜதி திரிபுட தாளத்தில் எடுத்தாண்ட விதம் பெருவிருந்தாக அமைந்தது. இதனை இயற்றி இசையைமைத்த பெருமை பரமகுரு நெய்வேலி ஸ்ரீ. சந்தானகோபாலன், குரு ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் ஆகியோரைச் சாரும். கல்கியின் "பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்" பாடலைத் தொடர்ந்து, பேஹாக் ராகத் தில்லானாவை விறுவிறுப்பாகப் பாடி, "சாந்தி நிலவ வேண்டும்" என்றுல் இசையால் பிரார்த்தித்து மங்களத்துடன் நிறைவு செய்தார்.
திரு. விட்டல் ராமமூர்த்தி (வயலின்), திரு. திருவனந்தபுரம் பாலாஜி (மிருதங்கம்), திரு. கே.வீ. கோபாலகிருஷ்ணன் (கஞ்சிரா) ஆகியவை கச்சேரியை ஓர் உயர்நிலைக்கு எடுத்துச் சென்றன. சிந்துவின் ஒன்றுவிட்ட சகோதரி ஷாயினி தம்புரா மீட்டினார்.

சிந்து தனது இசைப் பயணத்தை குரு திருமதி. அகிலாவிடம் தொடங்கினார். மேலதிகக் கற்கை மற்றும் அரங்கேற்ற விசேடப் பயிற்சியை குரு. ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனிடம் பெற்றுக்கொண்டார். பன்னிரண்டே வயதான சிந்து மூன்று மணித்தியால கச்சேரியை நிகழ்த்தி உள்ளங்களை ஈர்த்தார் என்றால் மிகையாகாது. சிந்து கல்வியிலும், கலைகளிலும் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகின்றோம்

ஆங்கிலத்தில்: அனு சுரேஷ், ஸ்ருதி ஸ்வர லயா, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
தமிழில்: புஷ்பராஜா ராஜேஸ்வரன்
More

சான் அன்டோனியோ: தீபாவளிக் கொண்டாட்டம்
ரொறொன்ரோ: ஏ.ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி
ஃபார்மிங்டன் ஹில்ஸ்: விஸ்வரூப ஸ்ரீ பக்த ஹனுமான்
பாரதி தமிழ்ச் சங்கம்: 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகம்
அரங்கேற்றம்: அனிகா காஞ்சி
ஹார்வர்டு தமிழ் இருக்கை: 'இதய கீதம்'
ஸ்ரீ லலித கான வித்யாலயா: வெள்ளி விழா
செவிலியர் தலைமைத்துவ மாநாடு
அரங்கேற்றம்: அதிதி கிருஷ்ணன்
அரங்கேற்றம்: ஷ்ரத்தா ராம்நாத்
அரங்கேற்றம்: ஸ்ருதி ஸ்ரீதர்
கச்சேரி: சுவேதா சுப்பையா
ஆனந்தநாராயண பாகவதர் நாமசங்கீர்த்தன யாத்திரை
இரட்டை அரங்கேற்றம்: மஹதி ஆத்ரேயா, ஹரிஹரன் சண்முகம்
Share: 




© Copyright 2020 Tamilonline